தொழிலதிபர் என்னை மிரட்டுகிறார் - பிரபல நடிகையின் குற்றச்சாட்டால் பரபரப்பு

entrepreneur complain Sanjjanaa Galrani
By Anupriyamkumaresan Oct 22, 2021 10:41 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in பிரபலங்கள்
Report

தொழிலதிபர் ஒருவர் தன்னை மிரட்டுவதாக பிரபல நடிகை சஞ்சனா கல்ராணி வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த ஆண்டு நடிகைகள் சிலருக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருந்ததாக புகார் எழுந்தது.

விஸ்ரூபம் எடுத்த இந்த விஷயத்தில் முன்னணி நடிகர், நடிகைகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், பார்ட்டி ஒன்றில் அதிக அளவில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டதாகவும், அதில் தொடர்புடைய நடிகைகள் யார் என்று போலீசார் விசாரித்து வந்தனர்.

தொழிலதிபர் என்னை மிரட்டுகிறார் - பிரபல நடிகையின் குற்றச்சாட்டால் பரபரப்பு | Actress Sanjana Kalrani Complaint Entrepreneur

அதன் அடிப்படையில் போதைப்பொருட்களை விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக கன்னட நடிகை சஞ்சனா கல்ராணியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு கைது செய்தனர். பின்னர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள், 4 மாத சிறை தண்டனைக்கு பிறகு ஜாமினில் வெளியே வந்தார்.

இந்நிலையில் ராகுல் டான்சி என்பவர், தனது பணத்தை மோசடி செய்துவிட்டதாக நடிகை சஞ்சனா கல்ராணி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், தொழிலதிபர் ராகுல் டான்சி என்பவரின் பேச்சை கேட்டு, கடந்த 3 ஆண்டுகளாக பணத்தை முதலீடு செய்தேன்.

தொழிலதிபர் என்னை மிரட்டுகிறார் - பிரபல நடிகையின் குற்றச்சாட்டால் பரபரப்பு | Actress Sanjana Kalrani Complaint Entrepreneur

ஆனால் நான் முதலீடு செய்த பணத்திற்கு வட்டி கொடுக்கவில்லை. பணத்தை திருப்பிக் கேட்டால் மிரட்டுவதாகவும், என் பெயரை கெடுக்கும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதாகவும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.