சமந்தாவுக்கு முதல்ல இருந்தே இவர் மேல ஒரு கண்ணாம் - அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்ள்
நடிகர் சூர்யாவுடனான நினைவுகள் குறித்து நடிகை சமந்தா பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா, நடிகர் நாக சைதன்யாவுடனான திருமண பிரிவுக்குப் பின் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் அவர் நடிப்பில் அடுத்ததாக விஜய் சேதுபதியுடன் நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
இதனிடையே சமந்தா தனது பள்ளிப்பருவம் குறித்து பேசியுள்ள பேட்டி ஒன்றில், பள்ளி பயிலும்போது நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகையாக இருந்ததாகவும், 11 ஆவது படிக்கும்போது திரையில் சூர்யாவின் காக்க காக்க படம் பார்த்ததையும் நினைவு கூர்ந்துள்ளார்.
மேலும் ஒருநாள் சமந்தா படிக்கும் கல்லூரிக்கு சூர்யா சிறப்பு விருந்தினராக வந்த நிலையில் அவரும், நண்பர்களும் சூர்யா சூர்யா என கூச்சலிட்டு ஆரவாரம் செய்துள்ளனர். எப்படியாவது சூர்யாவுடன் போட்டோ எடுத்து விட வேண்டும் என ஆசைப்பட்ட தான் பின்னாளில் அவருடன் அஞ்சான்,24 படத்தில் நடித்ததெல்லாம் மறக்க முடியாத நிகழ்வு என சமந்தா கூறியுள்ளார்.