படப்பிடிப்பு தளத்தில் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை : ஆழமுள்ள நீரில் மூழ்கியதால் பரபரப்பு!
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, தற்போது விஜய் நிர்வாணா இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா ஜோடியாக குஷி என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.
வருகிற டிசம்பர் மாதம் 23-ந் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வட இந்திய பகுதியான காஷ்மீரில் நடைபெற்றது.
இதில் நடிகை சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் பங்கேற்று நடித்த நிலையில், படப்பிடிப்பின் போது நடிகை சமந்தாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் விபத்தில் சிக்கியதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஆக்ஷன் காட்சியை படமாக்கியபோது அங்குள்ள ஆற்றின் குறுக்கே இருவரும் பைக்கில் கடந்து செல்வது போன்ற காட்சியை படம் பிடித்துள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக பைக்கில் இருந்து இருவரும் தவறி விழுந்து நீரில் மூழ்கி உள்ளனர். இதைப்பார்த்து பதறிப்போன குஷி படக்குழு உடனடியாக விரைந்து செயல்பட்டு இருவரையும் பத்திரமாக மீட்டு முதலுதவி அளித்தனர்.
இதனை தொடர்ந்து இருவருக்கும் வலி அதிகமாக இருந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, ஓய்வு எடுப்பதற்காக விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு ஃபிசியோதெரபி அளிக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் குணமாகி உள்ளனர்.
மேலும், நேற்று குஷி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்ததாக படக்குழு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.