விவாகரத்துக்குப் பின் தோழியுடன் சென்ற சமந்தா - வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி
நடிகை சமந்தா தனது தோழியுடன் ஆன்மிக சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா, தனது கணவரும் நடிகருமான நாக சைதன்யாவை கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனையடுத்து குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்ததாகவும் , கருகலைத்ததாகவும் சமந்தா மீது சரமாரியாக வதந்திகள் பரவ ஆரம்பித்தன.
இவை அனைத்துமே பொய் என்றுக் கூறி இன்ஸ்டாகிராமில் அவர் தெரிவித்திருந்தார்.மேலும் சமந்தா தன்னைப் பற்றி அவதூறு செய்திகளைப் பரப்பியதாக சில யூ-ட்யூப் சேனல்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இப்படி பல பிரச்சனைகளால் மன அழுத்தத்தில் இருக்கும் சமந்தா தனது தோழியான ஷில்பா ரெட்டியுடன் ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளார். இருவரும் ஒன்றாக செல்வதை உறுதி செய்யும் வகையில் ஷில்பா ரெட்டி இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் தனி ஹெலிகாப்டர் முன் சமந்தா, ஷில்பா ரெட்டி நிற்கின்றனர். இருவரும் கேதர்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி உள்ளிட்ட கோயில்களுக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆன்மிக சுற்றுலா முடிந்து வந்த பிறகு சமந்தா நடிப்பில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.