நான் உங்க கூட ‘இனப்பெருக்கம்’ செய்ய ஆசையாக இருக்கு... - ஆபாசமாக கேள்வி கேட்டவருக்கு நெத்தியடி கொடுத்த சமந்தா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளில் நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்த நடிகை சமந்தாவும், நடிகர் நாகசைதன்யாவும் விவகாரத்து செய்து பிரிந்து செல்வதாக இருவரும் சமூகவலைத்தளங்களில் அறிவிப்பை வெளியிட்டார்.
இவர்களது அறிவிப்பை கேட்டு ஒட்டுமொத்த ரசிகர்களும், சினிமாத்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதன் பிறகு தன்னுடைய பெயருக்கு பின்னால் இருக்கும் கணவர் பெயர் நாகசைதன்யாவை அதிரடியாக நீக்கினார் நடிகை சமந்தா.
மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான நடிகை சமந்தா, கோவில், சுற்றுலாவிற்கெல்லாம் சென்று வந்தார்.
பிறகு, தன்னுடைய வேலையில் மிகவும் பிஸியாக இறங்கி தன்னுடைய வேலையைப் பார்த்து வருகிறார்.
சமீபத்தில் புஷ்பா படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடி இருந்தார். இப்பாட்டு வெளியான ஓரிரு நொடிகளிலேயே செம்ம வைரலாக பரவி பட்டித்தொட்டியெங்கும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சமந்தாவிடம் நெட்டிசன் ஒருவர் ஒரு கேள்வி எழுப்பினார்.
அதில், அந்த நெட்டிசன், நீங்கள் இதுவரை இனப்பெருக்கம் செய்திருக்கிறீர்களா?... உங்களுடன் இனப்பெருக்கம் செய்து கொள்ள எனக்கு மிகவும் ஆசையாக உள்ளது என்று கேட்டார்.
அதற்கு நடிகை சமந்தாவோ, “முதலில் ஒரு வாக்கியத்தில் 'இனப்பெருக்கம்' என்னும் வார்த்தையை எப்படி பயன்படுத்துவது என்பதை கூகுளில் தேடி கற்றுக் கொள்ளுங்கள்” என்று சாதூர்யமாக சொல்லி, நெத்தியடி கொடுத்து பதில் அளித்துள்ளார்.
நெட்டிசனின் வரம்பு மீறிய கேள்வியை கூட, நடிகை சமந்தா கோபப்படாமல் கூலாக பதிலடி கொடுத்த விதத்தை ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.
சமந்தாவின் இந்த பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி, பாராட்டி வருகிறார்கள்.