சக நடிகையால் சமந்தாவுக்கு நிகழ்ந்த சோக சம்பவம் - கடுப்பான ரசிகர்கள்

alluarjun dishapatani actresssamantha சமந்தா புஷ்பா pushpatherise pushpatherule ஊசொல்றியாமாமா
By Petchi Avudaiappan Mar 22, 2022 07:57 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

நடிகை சமந்தாவுக்கு ஏற்பட்ட பேரிழப்பு குறித்து அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். 

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, நடிகர் நாக சைதன்யாவுடனான விவாகரத்துக்குப் பிறகு தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் அவர் நடிப்பில்  அடுத்ததாக விஜய் சேதுபதியுடனான காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகவுள்ளது. 

சக நடிகையால் சமந்தாவுக்கு நிகழ்ந்த சோக சம்பவம் - கடுப்பான ரசிகர்கள் | Actress Samantha Lost A Good Opportunity

இதற்கிடையில் அல்லு அர்ஜூன் , ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் நடிகை சமந்தா பாடல் ஒன்றிற்கு நடனமாடியிருந்தார். ஊ சொல்றியா மாமா பாடலுக்கு  அவர் ஆடிய கவர்ச்சி நடனத்தைப் பார்த்து ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகினரே அதிர்ச்சியடைந்தனர். இந்த பாடலுக்கு கவர்ச்சியாக ஆட ரூ. 5 கோடி கேட்டதாக கூறப்பட்டது. 

பாட்டு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த பாடலுக்கு முதன் முதலில் நடனமாட பாலிவுட் நடிகையான திஷா பதானியிடம் தான் கேட்கப்பட்டது. ஆனால் அவரால் முடியாமல் போகவே சமந்தா இடம் பெற்று ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார். 

சக நடிகையால் சமந்தாவுக்கு நிகழ்ந்த சோக சம்பவம் - கடுப்பான ரசிகர்கள் | Actress Samantha Lost A Good Opportunity

இதனிடையே புஷ்பா படத்தின் 2 ஆம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதில் குத்துப்பாடல் ஒன்று இடம் பெறவுள்ளது. இதில் நடிக்க நடிகை திஷா பதானியை ஒப்பந்தம் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கவர்ச்சியாக ஆட முதலில் மறுத்த தன்னை அல்லு அர்ஜூன் மற்றும் இயக்குநர் சுகுமார் தான் சம்மதிக்க வைத்ததாக சமந்தா தெரிவித்திருந்தார். 

ஆனால் கவர்ச்சி விஷயத்தில் திஷா பதானி  எந்த சமரசம் இல்லாமல் எந்த எல்லைக்கும் போய் நடிக்க கூடியவர் என்பதால் இப்பாடலில் கவர்ச்சியான நடனத்தை ரசிகர்கள் கண்டுகளிக்க உள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.