சமந்தா, நாகசைதன்யா விவாகரத்து விவகாரம் - மாமனார் பதிவிற்கு சமந்தா வாழ்த்து: அதிர்ச்சியில் ரசிகர்கள்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சமந்தா. அவருக்கும், அவரது காதல் கணவருக்கும் இடையே ஏதோ பிரச்சனை இருப்பதாக தகவல் வெளியான நிலையில், சமந்தா தனது மாமனாரின் பதிவு ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா. சென்னை பெண்ணான அவர் தன்னுடன் நடித்த நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டு ஆந்திராவிலேயே செட்டில் ஆகிவிட்டார்.
திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து அவர் படங்களில் நடித்து வருகிறார். அதற்கு மாமியார் வீட்டிலும் முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டது. ஆனால் அது தான் தற்போது பிரச்சனையாக இருக்கிறது.
அவர் சமீபத்தில் வெளியான படம் ஒன்றில் படு கவர்ச்சியாக நடித்துள்ளதால் குடும்பத்தில் இருப்பவர்கள் கண்டித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் சமந்தா சமூக வலைத்தளங்களில் தங்களது குடும்ப பெயரை நீக்கி எஸ் என வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இது குறித்து இரு தரப்பில் இருந்தும் அறிவிப்பு வெளியாகவில்லை. நாக சைதன்யாவும் ஒரு பேட்டியில் சமந்தா பற்றி கேட்டதர்க்கு தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேச வேண்டாம் என கடுமையாக சொல்கிறார்.
அதே போல சமந்தாவும் நாக சைதன்யா படத்தின் ஹீரோயின் மட்டும் டேக் செய்து வாழ்த்து தெரிவித்திருந்தார். இதனால் இருவருக்கும் கட்டாயம் பிரச்சனை தான் என உறுதியாக இருந்தனர்.
ஆனால் சமந்தா, தன்னுடைய மாமனார் நாகார்ஜூனாவின் தந்தையின் நினைவு நாளையொட்டி வெளியிட்டிருந்த வீடியோவை சமந்தா ட்விட்டர் பக்கத்தில் மிகவும் அழகாக இருப்பதாக பதிவிட்டு இருந்தார்.
திடீரென அந்த பதிவை நீக்கிய சமந்தா, மிகவும் அழகாக இருக்கிறது மாமா என குறிப்பிட்டு சமந்தா மீண்டும் அந்த வீடியோவை ஷேர் செய்திருந்தார். இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
This is so beautiful @iamnagarjuna mama 🥺🙏🤗❤️ #ANRLivesOn https://t.co/Xt6XQ6rhNu
— S (@Samanthaprabhu2) September 20, 2021