சமந்தா - நாகசைதன்யா மீண்டும் இணைகிறார்களா? - குழம்பும் ரசிகர்கள்
சமந்தா - நாக சைதன்யா இருவரும் மீண்டும் இணைய உள்ளதாக சமூக வலைத்தள பக்கங்களில் பேசப்பட்டு வருவதால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா கடந்தாண்டு அக்டோபர் மாதம் தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் அவர் புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஓ..சொல்றீயா மாமா பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
விவாகரத்தை அறிவித்த பிறகு சமீபத்தில் சமந்தாவும், நாக சைதன்யாவும் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். ஐதராபாத்தில் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் இருவர் நடிக்கும் பட ஷுட்டிங்கும் நடந்துள்ளது. இதில் கலந்து கொள்ள வந்தவர்கள், நேருக்கு நேர் பார்த்தும் ஏதும் பேசிக் கொள்ளாமல் தங்களின் கார்களில் ஏறி சென்றுள்ளனர்.
அதேசமயம் நாகசைதன்யா தனது பேட்டி ஒன்றில் சமந்தாவை விட்டுக்கொடுக்காமல் பேசியது அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனிடையே நடிகை சமந்தா தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்திருந்த பதிவை நீக்கியுள்ளார். இதனால் இருவரும் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால் சமந்தாவை பிரிவதாக நாக சைதன்யா அறிவித்த அறிவிப்பு இன்னும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்படியே உள்ளது.இதனால் சமந்தா, நாக சைதன்யா இருவரும் இணைய வாய்ப்பே இல்லை என கூறப்படுகிறது.