தன்னை தத்தெடுத்து வளர்க்கிறார்களா? மனம் உடைந்து போன சாய்பல்லவி..!

Sai Pallavi Tamil Cine Talk Tamil Cinema
By Thahir Apr 21, 2022 02:22 AM GMT
Report

2015 ஆம் ஆண்டில் வெளிவந்து மாபெரும் வெற்றிப் படமாக ஓடிய மலையாளத் திரைப்படமான பிரேமம் திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தவல் நடிரக சாய்பல்லவி.

பின்னர் இதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டில் வெளியான கலி என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்தார்.

தன்னை தத்தெடுத்து வளர்க்கிறார்களா? மனம் உடைந்து போன சாய்பல்லவி..! | Actress Saipallavi Open Talk

வருண் தேச்சுடன் இணைந்து பானுமதி என்ற கதாபாத்திரத்தில் காதல் படமான பிடாவில் நடித்ததன் மூலம் 2017 இல் தெலுங்கு திரைப்பட உலகில் அறிமுகமானார்.

தொலைக்காட்சியில் பிடா திரைப்படம் ஒளிபரப்பப்பட்டபோது தொலைக் காட்சிகளுக்கான தரவரிசையில் ஐந்தாவது முறையாக அதிகபட்ச இலக்கு அளவீட்டுப் புள்ளியை எட்ட இப்படம் காரணமாக இருந்தது.

மலையாளத்தில் வெளியான திரைப்படம் மூலம் அதிகம் ரசிகர்களை பெற்றார். இவர் நடிப்பு,நடனம்,பாடகி என்ற திறமைகளில் சிறந்து விளங்கி வருகிறார்.

இவர் தனது பெற்றோர்களிடம் கேட்ட கேள்வி அவர்களை அதிர்ச்சி அடைய செய்ததாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தன்னை தத்தெடுத்து வளர்க்கிறார்களா? மனம் உடைந்து போன சாய்பல்லவி..! | Actress Saipallavi Open Talk

கன்னத்தில் முத்தமிட்டாள் திரைப்படத்தை பார்க்கும் போது நடிகை சாய் பல்லவிக்கு சிறு வயது. அப்போதே நடிகை சாய் பல்லவிக்கு அந்த படத்தின் தாக்கம் ஆட்கொண்டது.

இந்த நிலையில் அந்த படத்தை பார்த்து விட்டு வீட்டிற்கு சென்ற அவர் பெற்றோரிடம் நீங்க ரெண்டு பேரும் கருப்பா இருக்கீங்க ஆனால் நான் மட்டும் கலராக இருக்கிறேன் என்றும்,

கன்னத்தில் முத்ததிட்டால் திரைப்படத்தில் வருவது போன்று என்னையும் எங்கையாவது தத்தெடுத்து வந்துட்டீங்களா என கேட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் நீயும் உன் தங்கை பூஜாவும் ஒரே மாதிரி கலரா தான் இருக்கீங்க என சமாதானம் செய்துள்ளார்கள்.