நித்தியானந்தாவுடன் இருக்கிறேன்; வாழ்க்கையே போயிடுச்சு - ரஞ்சிதா வேதனை

Ranjitha Nithyananda
By Sumathi Oct 10, 2024 02:30 PM GMT
Report

நடிகை ரஞ்சிதா அளித்துள்ள பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.

நடிகை ரஞ்சிதா

தமிழ் சினிமாவில் நாடோடி தென்றல் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ரஞ்சிதா. பொண்டாட்டி ராஜ்ஜியம், வால்டர் வெற்றிவேல், அமைதிப்படை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

நித்தியானந்தாவுடன் இருக்கிறேன்; வாழ்க்கையே போயிடுச்சு - ரஞ்சிதா வேதனை | Actress Ranjitha About Nithyanandha Viral

இறுதியாக ராவணன் படத்தில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்தார். ஒருகட்டத்தில் சினிமாவிலிருந்து ஒதுங்கினார். அப்போது நித்தியானந்தாவுடன் தனியறையில் ரஞ்சிதா நெருக்கமாக இருந்த வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய நித்யானந்தா வழக்குகளில் இருந்து தப்பி, 'கைலாசா' என்னும் நாட்டினை உருவாக்கி அதில் தற்போது வாழ்ந்து வருகிறார். அங்குதான் ரஞ்சிதாவும் கைலாசாவின் பிரதமராக பணியாற்றிவருவதாக கூறப்படுகிறது.

அடுத்த ஸ்கெட்ச் - வெளிநாட்டு கோவில்களை வாங்கும் நித்தியானந்தா!

அடுத்த ஸ்கெட்ச் - வெளிநாட்டு கோவில்களை வாங்கும் நித்தியானந்தா!

ஆன்மீகம் மீது பற்று

இந்நிலையில் ரஞ்சிதா முன்னதாக அளித்துள்ள பேட்டி ஒன்றில், நான் நடிகையாக இருந்த சமயத்தில் வந்த கிசுகிசு என்றால் நான் ஷூட்டிங்கிலும் புத்தகமும், கையுமாக இருப்பேன் என்பதுதான். அந்தப் புத்தகங்கள்தான் என்னை அமைதியாக்கி பக்குவப்படுத்தியது. இருந்தாலும் அந்தக் கசப்பான அனுபவம் தந்த வலி தீராதது.

nithyanantha - ranjitha

எனது கணவரும் அதனால் என்னைவிட்டு பிரிந்துவிட்டார். எனக்கு நடந்த விஷயங்களை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அனைத்துக்கும் ஒரு எல்லை இருக்கிறது. அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. நாங்கள் இருவரும் பிரிந்துவிட்டோம். எனது இளமை காலத்திலிருந்தே கடவுள், ஆன்மீகம் மீது நிறைய பற்று வைத்திருப்பவள் நான்.

அதை இன்றுவரை கடைப்பிடித்துக்கொண்டுதான் இருக்கிறேன். என்னை பற்றி எத்தனையோ விமர்சனங்கள் வந்திருக்கலாம். ஆனால் நான் இன்றும் நித்தியானந்தாவின் சீடர்தான். இப்போதும் அவருடனேயேதான் இருக்கிறேன். இனியும் அவருடன் தான் இருப்பேன். ஆன்மீக வழியில் செயல்படுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.