செட்டில் ரஜினி அத பண்ணாரு; பயங்கரமா அழுதுட்டேன் - போட்டுடைத்த ரம்பா!

Rajinikanth Rambha Tamil Cinema Tamil Actors Tamil Actress
By Jiyath Dec 30, 2023 04:25 PM GMT
Report

ரஜினியுடன் நடிக்கும்போது நிகழ்ந்த ஒரு நகைச்சுவையான சம்பவம் குறித்து நடிகை ரம்பா பேசியுள்ளார்

நடிகை ரம்பா

90ஸ் காலகட்டத்தில் பலரின் கனவுக் கன்னியாக வளம் வந்தவர் நடிகை ரம்பா. ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்தி, அஜித், விஜய், என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக இருந்தார்.

செட்டில் ரஜினி அத பண்ணாரு; பயங்கரமா அழுதுட்டேன் - போட்டுடைத்த ரம்பா! | Actress Rambha About Incident With Rajinikanth

கடந்த 2010ம் ஆண்டு இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்தார். அதற்கு பிறகு சினிமாவை விட்டு விலகியிருந்த ரம்பா தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் அருணாச்சலம் படத்தில் ரஜினியுடன் நடிக்கும்போது நிகழ்ந்த ஒரு நகைச்சுவையான சம்பவம் குறித்து பேசியுள்ளார்.

ரம்பா பேசியதாவது "ரஜினி சார் கூட அந்த படத்தில் நடிக்கும்போது சல்மான்கானின் பந்தன் என்ற படத்திலும் நடித்துக்கொண்டிருந்தேன். இரண்டு படங்களின் ஷூட்டிங்கும் ஹைதராபாத்தில் நடைபெற்றது.

வடிவேலு டீ சாப்ட்டா கூட 10 பைசா குடுக்க மாட்டாரு; அதான் நல்லாருக்காரு - நடிகர் கஞ்சா கருப்பு!

வடிவேலு டீ சாப்ட்டா கூட 10 பைசா குடுக்க மாட்டாரு; அதான் நல்லாருக்காரு - நடிகர் கஞ்சா கருப்பு!

ஒருநாள் ரஜினி சார் படத்தின் செட்டிற்கு சல்மான்கான் மற்றும் ஜாக்கி ஷெராப் ஆகியோர் ரஜினி சாரை சந்திக்க வந்தனர். வந்தவுடன் நானும் அவர்களை கட்டிப்பிடித்து பேசிக்கொண்டிருந்தேன். இதையெல்லாம் ரஜினி சார் பார்த்துக்கொண்டே இருந்தார். பின்னர் அவர்கள் ரஜினி சாரை சந்தித்து விட்டு சென்றனர்.

கலாட்டா பண்ணாரு

அவர்கள் சென்றவுடன் நான் சாதாரணமாக வந்து அமர்ந்தேன். அப்போது அங்கு ஒரு விவாதம் போய்க்கொண்டிருந்தது. திடீரென ரஜினி சார் அவர் கையில் வைத்திருந்த துண்டை கோபத்துடன் கீழே தூக்கி வீசி விட்டுச் சென்றார்.

செட்டில் ரஜினி அத பண்ணாரு; பயங்கரமா அழுதுட்டேன் - போட்டுடைத்த ரம்பா! | Actress Rambha About Incident With Rajinikanth

அப்போது அங்கிருந்தவர்கள் எல்லோரும் ரஜினி சாரையும் பார்த்தனர், என்னையும் பார்த்தனர். எனக்கு ஒன்றும் புரியவில்லை. எல்லோரும் என்னிடம் வந்து என்ன ரம்பா என்ன இப்படி பண்ணீட்டிங்கா. ரஜினி சார் உங்களாலதான் அப்செட்டா இருக்காரு. இனி உங்களுடன் அவர் நடிக்க மாட்டார் என்று சொன்னாரு" என்றனர். எல்லோரும் என்னிடம் அதையே சொன்னவுடன் நான் அழ தொடங்கிவிட்டேன். உடனே ரஜினி சார் ஓடி வந்து "என்ன புள்ளைய அழ வச்சுட்டீங்க" என்று எல்லோரையும் அடித்தார்.

அப்போதுதான் அவர் சொன்னார் "நேத்து சல்மான்கான் எல்லாம் வந்தவுடன், ரம்பா எப்படி ஓடிப்போய் அவர்களை கட்டிப்பிடித்து பேசினார். நம்மளோட செட்டுக்கு வரும்போது மட்டும் அமைதியா வந்து உட்கார்ந்து புக் எடுத்து படிக்கிறது. நார்த் ஹீரோஸ்னா நீங்க அதெல்லாம் பண்ணுவீங்க. நாங்க சவுத் ஹீரோஸ்னா உங்களுக்கு கேவலமா போச்சா" என்று கூறி ரஜினி சார் கலாட்டா பண்ணீட்டாரு" என்று ரம்பா கலகலப்பாக பேசியுள்ளார்.