படப்பிடிப்பில் வழுக்கி விழுந்த நடிகை ரக்சிதா - பதறிப்போன ரசிகர்கள்..!
பிரபல சீரியல் தொடரான சரவணன் மீனாட்சி மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ரக்சிதா.
தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் போன்ற தென்னிந்திய அனைத்து மொழி சீரியல் தொடர்களிலும் நடித்துள்ளார்.
இவர் பிரிவோம் சந்திப்போம்,இளவரசி,சரவணன் மீனாட்சி 2 மற்றும் 3,நாச்சியார்புரம்,நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.
தன்னுடன் சீரியல் தொடர்களில் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து கடந்த 2015 ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
கடந்த ஒரு ஆண்டாக கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.
இவர்கள் இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க இருதரப்பு குடும்பத்தினரும் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இவர் தற்போது சொல்ல மறந்த கதை என்ற தொடரில் நடித்து வருகிறார்.
தற்போது இந்த தொடரின் படப்பிடிப்பு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஷூட்டிங் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதில், மழையில் நடந்து செல்லும் ரக்சிதா வழுக்கி விழுவது போன்ற வீடியோ. முழு வீடியோ பார்த்த பின்பு தான் அது ஷூட்டிங்காக எடுத்தது என தெரிகிறது.
ஆனால், நிஜமாக விழுந்தது போலவே பார்க்க இருக்கவே ரசிகர்கள் ஷாக் ஆகி வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.
ஒரு பக்கம் அவர் நிஜமாகவே வழுக்கி விழுந்ததை அப்படியே ஷூட்டிங் செய்து சமாளித்து இருக்கிறது சீரியல் குழு என கூறி வருகின்றனர். இந்த காட்சி சீரியலில் வருமா இல்லயா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தீப்பிழம்புடன் மாணவர் விடுதிக்குள் புகுந்த விமானம் : 20 இந்திய மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பலி ! IBC Tamil

இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
