‘நான் 2 தவணை தடுப்பூசி போட்டும் 2-வது முறையாக கொரோனா தொற்று வந்துடுச்சு...’ - நடிகை ரைசா வேதனை
இந்தியாவில் கொரானா தொற்றின் 3-வது அலை தற்போது அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. இதனால், மாநிலம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த 3-வது அலையில் திரைத்துறை பிரபலங்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், நடிகை ரைசா வில்சன் 2வது முறை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
2 தவணை கொரோனா தடுப்பூசி அவர் செலுத்திக்கொண்ட போதிலும் அவருக்கு 2வது முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
இது குறித்து நடிகை ரைசா கூறுகையில் -
"2வது முறையாக கோவிட்! இரண்டு முறை தடுப்பூசி போட்ட பிறகும். அறிகுறிகள் கடுமையான தலைவலி, உடல் வலி, சளி, தொண்டை வலி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தன. சென்னை சூழலே தற்போது எனக்கு நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இது எவ்வளவு நாள் என்று தெரியவில்லை. இந்த வைரஸ் பரவும். பாதுகாப்பாக இருங்கள் நண்பர்களே, முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.
புது வருடம் துவங்கியதிலிருந்து இந்தியத் திரைத்துறை பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், நடிகர் சத்யராஜ், த்ரிஷா, தமன், அருண் விஜய், குஷ்பு உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.