ரூ.160 கோடி வீட்டை விட்டு வெளியேறிய நடிகை; உயிருக்கே ஆபத்து.. - என்ன நடந்தது..?

Tamil Cinema Bollywood Priyanka Chopra Actress
By Jiyath Feb 03, 2024 03:51 PM GMT
Report

நடிகை பிரியங்கா சோப்ரா- நிக் ஜோன்ஸ் தம்பதி சொந்த வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரியங்கா சோப்ரா

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் பிரியங்கா சோப்ரா. இவர் கடந்த 2018ம்- ஆண்டு அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை திருமணம் செய்துகொண்டார்.

ரூ.160 கோடி வீட்டை விட்டு வெளியேறிய நடிகை; உயிருக்கே ஆபத்து.. - என்ன நடந்தது..? | Actress Priyanka Chopra Left Her Home

தற்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2019ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சகல வசதிகளும் கொண்ட பிரம்மாண்ட வீட்டை ரூ.160 கோடிக்கு வாங்கினார்.

வழக்கு 

இந்நிலையில் கடந்த 4 வருடங்களாக அந்த வீட்டில் வசித்து வந்த பிரியங்கா சோப்ரா- நிக் ஜோன்ஸ் தம்பதி தற்போது அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரூ.160 கோடி வீட்டை விட்டு வெளியேறிய நடிகை; உயிருக்கே ஆபத்து.. - என்ன நடந்தது..? | Actress Priyanka Chopra Left Her Home

அந்த வீட்டில் கட்டுமான பணிகள் முறையாக செய்யப்படாததால் ஆங்காங்கே நீர் கசிவு ஏற்பட்டு வீட்டின் பெரும்பாலான பகுதிகளில் பூஞ்சைகளால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் வீட்டை விற்ற கட்டுமான நிறுவனம் மீது பிரியங்கா சோப்ரா வழக்கு தொடர்ந்துள்ளார்.