பிரபல டிவி சீரியல் நடிகை தற்கொலை - காதலரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை

By Nandhini May 16, 2022 06:53 AM GMT
Report

வங்காள மொழி டி.வி.நடிகை பல்லபி டேய் தனது அறையில் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

மேற்கு வங்காளத்தைச் சேரந்தவர் பல்லபி டேய் 21 வயதான இவர் தொலைக்காட்சி நடிகையாக இருந்து வருகிறார்.

இவர் கொல்கத்தாவில் இருக்கும் கார்ஃபா பகுதியில் தன் காதலரான சாக்னிக் சக்ரபர்த்தியுடன் லிவ் இன் முறைப்படி வாழ்ந்து வந்தார்.

வீட்டின் படுக்கையறையில் நேற்று பல்லபி டேய் திடீரென தூக்கில் தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சாக்னிக் அலறி துடித்தார்.

பின்னர் அருகில் குடியிருப்போர் உதவியுடன் பல்லபி டேய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் பல்லவி டேயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பல்லவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். பல்லவியின் மரணம் தொடர்பாக அவரின் காதலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து சாக்னிக்கின் பெற்றோர் கூறுகையில், எங்கள் மகனுக்கும், பல்லவிக்கும் இடையே எந்த பிரச்சனையும் கிடையாது. வேறு ஒரு இடம் பார்த்து தனியாக வாழு, திருமணம் முடிந்த பிறகு பல்லவியுடன் இருக்கலாம் என்று சாக்னிக்கிடம் கூறினேன். ஆனால் என்ன நடந்தது எங்களுக்கு தெரியவில்லை என்று கூறினார்.

பிரபல நடிகை தூக்கில் சடலமாக தொங்கி சம்பவம் மேற்கு வங்காளத்தில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  

பிரபல டிவி சீரியல் நடிகை தற்கொலை - காதலரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை | Actress Pallabi Dey Death