இயக்குநர் என்னை அறைந்தார்; அதனால் பட வாய்ப்புகளை இழந்தேன் - நடிகை பத்ம பிரியா

Karthikraja
in பிரபலங்கள்Report this article
இயக்குநர் அறைந்ததாக நடிகை பத்ம பிரியா குற்றஞ்சாட்டியுள்ளார்.
பத்ம பிரியா
தமிழ், மலையாளம்,தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகை பத்ம பிரியா.
தவமாய் தவமிருந்து படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர், பட்டியல், சத்தம் போடாதே, மிருகம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், பொக்கிஷம், தங்க மீன்கள் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
அறைந்த இயக்குநர்
இந்நிலையில் நிகழ்வு ஒன்றில் பேசிய பத்ம பிரியா, "மிருகம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பின் போது நான் உணர்வுபூர்வமாக நடிக்கவில்லை என கூறி அந்த படத்தின் இயக்குநர் என்னை அறைந்தார். இது குறித்து நான் நடிகர் சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். இதனையடுத்து, என்னை நாயகியாக வைத்து படம் எடுப்பதாக உறுதியளித்தவர்கள் வாய்ப்பு கொடுக்கவில்லை.
திரைத்துறையில் பெண்கள் தங்களின் பிரச்னையைப் பேசினால் அவர்களே பிரச்னைகளாக மாறிவிடுகின்றனர். ஆண்களுக்குக்கு வழங்கப்படும் பலமான கதாபாத்திரங்கள் பெண்களுக்கு மறுக்கப்படுகிறது.
இங்கு அழகான, மனமுடைந்த, நடன மங்கையாகவே பெண்களுக்கான கதாபாத்திரங்கள் வழங்கப்படுகின்றன. பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தையும் பாலின பாகுபாடு பற்றியும் தொடர்ந்து பேச வேண்டும். இல்லையென்றால், நிச்சயமாக அது உங்களை மீண்டும் காயப்படுத்தும்.” என பேசியுள்ளார்.