படவாய்ப்புக்காக அந்த நபர் என்னை படுக்கைக்கு அழைத்தார்.. - மனம் திறந்த நயன்தாரா... - ஷாக்கான ரசிகர்கள்..!

Nayanthara Tamil Cinema
By Nandhini Feb 02, 2023 12:38 PM GMT
Report

படவாய்ப்புக்காக என்னை படுக்கைக்கு ஒருவர் அழைத்தார் என்று நடிகை நயன்தாரா பேசிய செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை நயன்தாரா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஆண்டு ஜூன் 9-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இதனையடுத்து, திருமணம் நடந்து 4 மாதமே ஆன நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில், நயன்தாராவும், நானும் அப்பா, அம்மா ஆகிவிட்டோம் என்று இரட்டை குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டார். இந்த விவகாரம் சினிமாத்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடிகை நயன்தாராவும், கணவர் விக்னேஷ் சிவனும் தன் இரு மகன்களுடன் மகிழ்ச்சியாக கிறிஸ்துமஸ் கொண்டாடினர். இதனையடுத்து, நடிகை நயன்தாரா தன் குடும்பத்துடன் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

actress-nayanthara-vignesh-shivan-tamil-cinema

அவர் படுக்கைக்கு அழைத்தார்

சமீபத்தில் படவாய்ப்புக்காக என்னை படுக்கைக்கு ஒருவர் அழைத்தார் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகை நயன்தாரா பேசியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில்,

என் படத்தில் முக்கியமான கதாபாத்திரம் தருகிறேன். ஆனால் அதற்கு நீங்கள் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்று என்னிடம் ஒருவர் கூறினார். ஆனால் நான் அதற்கு முடியாது என்று தைரியமாக கூறிவிட்டேன். என் திறமைக்காக மட்டும் தான் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நம்புகிறேன் என்றார்.

தற்போது இது குறித்த செய்தி சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் யார் அந்த நபர்... கூறுங்கள்... என்று அதிர்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.