ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகளுக்கு தாயான நடிகை நமீதா - வாழ்த்தும் திரையுலகம்
முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை நமீதாவுக்கு இரட்டை ஆண் குழுந்தைகள் பிறந்துள்ளது.
நமீதாவுக்கு இரட்டை குழந்தை
நேற்று கிருஷ்ண ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.இந்த நிலையில் நடிகை நமீதா தனது கணவருடன் கையில் இரட்டை ஆண் குழந்தைகளுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு தனது நெருங்கிய நண்பர் வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அண்மையில் அவரின் சமூக வலைத்தள பக்கத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில் இந்த கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் நாங்கள் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
மருத்துவர்களுக்கு நன்றி
எங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. உங்கள் ஆசியும், அன்பும் அந்த குழந்தைகளுக்கு வேண்டும் என்று நம்புகிறோம். சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரெலா மருத்துவமனையில் எனக்கு குழந்தை பிறந்தது.
சிறந்த சுகாதார பராமரிப்பு மற்றும் சேவைகளுக்கு நாங்கள் உண்மையிலேயே நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம்.
எனது கர்ப்பகால பயணத்தில் என்னை வழிநடத்தி என் குழந்தைகளை இந்த உலகத்திற்கு கொண்டு வருவதற்காக உதவி செய்த டாக்டர் புவனேஸ்வரி மற்றும் அவரது குழுவினருக்கு உண்மையிலேயே நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
என் குழந்தைகளை இந்த உலகிற்கு கொண்டு வந்ததற்காக மருத்துவர் புவனேஸ்வரி மற்றும் அவரது குழுவினருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும், டாக்டர் ஈஸ்வரன் மற்றும் டாக்டர் வேல்முருகன் ஆகியோர் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார்கள்.
சிறந்த நண்பராகவும் வழிகாட்டியாகவும் இருந்ததற்கு டாக்டர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று நமிதா பதிவு செய்துள்ளார்.
அவருக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ள நிலையில் திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.