எனக்கும் அந்த நடிகருக்கும் வந்துருக்கலாம்.. என் கணவருக்கே தெரியும் - நடிகை மோகினி பகீர்!

Mohini Tamil Cinema Tamil Actors Tamil Actress Actress
By Jiyath Dec 31, 2023 03:30 PM GMT
Report

நடிகை மோகினி கிசுகிசுக்கள் குறித்து பேசியுள்ளார்.

நடிகை மோகினி

90ஸ்களில் பலரின் பேவரைட் நடிகையாக வளம் வந்தவர் மோகினி. அவரின் கண்கள் வித்தியாசமான நிறத்தில் இருப்பதால், அதற்கே தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

எனக்கும் அந்த நடிகருக்கும் வந்துருக்கலாம்.. என் கணவருக்கே தெரியும் - நடிகை மோகினி பகீர்! | Actress Mohini Talks About Gossips

மோகினி 'ஈரமான ரோஜாவே' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து நாடோடிப் பாட்டுக்காரன், சின்ன மருமகள், உடன் பிறப்பு, கண்மணி, ஜாமீன் கோட்டை, அந்த நாள், சேரன் சோழன் பாண்டியன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு. கன்னடா, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். பின்னர் பரத் என்பவரை திருமணம் செய்து கொண்ட மோகினி சினிமாவில் நடிப்பதை விட்டு விலகினார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட மோகினியிடம், அந்த காலத்தில் எந்த நடிகருடன் உங்களை கிசுகிசுக்கப்பட்டிருக்க கூடாத என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டது.

வடிவேலு டீ சாப்ட்டா கூட 10 பைசா குடுக்க மாட்டாரு; அதான் நல்லாருக்காரு - நடிகர் கஞ்சா கருப்பு!

வடிவேலு டீ சாப்ட்டா கூட 10 பைசா குடுக்க மாட்டாரு; அதான் நல்லாருக்காரு - நடிகர் கஞ்சா கருப்பு!

சமாளிக்கவே முடியாது

அதற்கு பதிலளித்த மோகினி "எனக்கும் நடிகர் அரவிந் சுவாமிக்கும் ஒரு கிசுகிசு வந்திருக்கலாம். அதேபோல் எனக்கும் அக்ஷய் குமாருக்கும் ஏன் கிசுகிசு வரவில்லை என்று இப்போது நான் வருத்தப்படுகிறேன்.

எனக்கும் அந்த நடிகருக்கும் வந்துருக்கலாம்.. என் கணவருக்கே தெரியும் - நடிகை மோகினி பகீர்! | Actress Mohini Talks About Gossips

மேலும் இப்போது உள்ள நடிகர்கள் என்றால், பாகுபலி நடிகர் பிரபாஸுடன் ஒரு கிசுகிசு வரவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். எனக்கு பரத்துடன் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அதனால் இந்த கிசுகிசுக்கள் வந்தால் கூட, நான் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ள மாட்டேன்.

யாரவது போய் என் கணவரிடமே, உன் மனைவி அந்த நடிகர்களுடன் கிசுகிசுக்கப்படுகிறாள் என்று சொன்னால். அவர், ஐயோ.. பாவப்பட்ட பையன் என்று கூறிவிட்டு சென்றுவிடுவார். ஏனெனில் என் கணவருக்கே தெரியும், அவரைத்தவிர வேறு யாராலும் என்னை சமாளிக்கவே முடியாதென்று" என மோகினி கலகலப்பாக பேசியுள்ளார்.