பாடகி சித்ரா-ராமர் கோவில் விவகாரம்; 'சகிப்பின்மை உச்சத்தில் உள்ளது' - குஷ்பு ஆதரவு!
அயோத்தி ராமர் கோவில் விவகாரம் தொடர்பாக பின்னணி பாடகி சித்ராவுக்கு நடிகை குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார்.
பாடகி சித்ரா
உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22ம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் பிரபல பின்னணி பாடகி கே.எஸ். சித்ரா, கும்பாபிஷேகம் தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் "கும்பாபிஷேக விழா நடைபெறும்போது, அன்றைய நாளின் நண்பகல் 12.20 மணியளவில், ஸ்ரீராமா, ஜெயராமா, ஜெயஜெயராமா என்று ஒவ்வொருவரும் மந்திரம் கூற வேண்டும். வீடுகளில் ஐந்து முகம் கொண்ட விளக்குகளை மாலையில் மக்கள் ஏற்ற வேண்டும்" என்று கேட்டு கொண்டார்.
குஷ்பு ஆதரவு
சித்ராவின் இந்த பதிவிற்கு சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து, அரசியல் பக்கம் அவர் சார்ந்து விட்டார் என விமர்சனங்களையும் வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் அவருக்கு நடிகை குஷ்பு ஆதரவு குரல் எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "'கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சகிப்பின்மை உச்சத்தில் உள்ளது.
அவர்களால் ஒருவரின் நம்பிக்கைகளை மதிக்க முடியாது மற்றும் அதை ஏற்றுக்கொள்ளவும் தைரியம் கிடையாது. இது எனது வழி அவர்களுக்கு அனுமதி இல்லை. பாடகி சித்ரா அவர்களுக்கு எனது முழு ஆதரவை தெரிவிக்கிறேன்' என பதிவிட்டுள்ளார்.
Intolerance is at its peak under the Communist & CONgress ruled States. They cannot respect one’s beliefs and have the courage to learn the grace of acceptance. It’s either my way or no way to them. Shame on them. I completely stand in solidarity with @KSChithra Chechi. https://t.co/eWau4PBHh7
— KhushbuSundar (@khushsundar) January 16, 2024