நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் இடையே மோதல் - கதறி அழுத பிரபல நடிகை..!
சூர்யா பட நடிகையை பேட்டி எடுக்கும் போது தொகுப்பாரை சக தொகுப்பாளர் அறைந்ததால் நடிகை கீர்த்தி ஷெட்டி கதறி அழுதார்.
உப்பனா திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி. இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருந்தார்.
இவர் நிகழ்ச்சி ஒன்றில் கதறி அழுத வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 41 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 'சூர்யா 41' என பெயரிடப்பட்டுள்ள இந்தப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது.
படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று வந்த நிலையில் மதுரை அடுத்த படப்பிடிப்பு நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் நடிகை கீர்த்தி ஷெட்டி விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பிரபல யூடியூப் பிரபலம் பிராங்க் சரித்திரன் நடத்தினார்.
சரித்திரன் தன்னுடன் கீர்த்தி ஷெட்டியை பேட்டி எடுத்த துணை தொகுப்பாளரை கன்னத்தில் அறைந்து சண்டையிட்டுள்ளார்.
இதை பார்த்த கீர்த்தி ஷெட்டி அதிர்ச்சியில் உறைந்து போய் திடீரென கதறி அழுதார். அப்போது சரித்திரன் இது பிராங்க் என்று சமாதானம் செய்தார்.
ஆனால் கீர்த்தி ஷெட்டி மளமளவென கண்ணீர் வடித்தார்.
இந்த மாதிரி எல்லாம் பண்ணாதீங்க எனக்கு கோபமாக பேசினால் கூட எனக்கு பிடிக்காது என்று அழுது கொண்டே கூறினார்.
தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.