தற்கொலை செய்துக் கொண்ட அம்மா... வேதனையில் தற்கொலைக்கு முயன்ற பிரபல நடிகை

By Petchi Avudaiappan May 24, 2022 07:30 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

பிரபல நடிகை கல்யாணி தனது அம்மா குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பதிவு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபுதேவா நடித்த அள்ளி தந்த வானம், ஜெயம் ரவி நடித்த ஜெயம் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ் பெற்றவர் கல்யாணி.இதைத் தொடர்ந்து சின்னத்திரையில் தாயுமானவர் தொடர் மற்றும் கடற்கரைப் பெண்கள் என்ற ரியாலிட்டி ஷோ மூலம் மிகவும் புகழ் பெற்றார். கடந்த 2013 ஆம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவரான ரோஹித்தை மணந்த கல்யாணிக்கு 2018 ஆம் ஆண்டு நவ்யா என்ற பெண் குழந்தை பிறந்தது.

தற்கொலை செய்துக் கொண்ட அம்மா... வேதனையில் தற்கொலைக்கு முயன்ற பிரபல நடிகை | Actress Kalyani Emotional Post On Her Mother

திருமணத்திற்கு பிறகு சின்னத்திரையிலிருந்து விலகி இருந்த கல்யாணி தற்போது ஜீ தமிழில் ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிலையில் நடிகை கல்யாணி தனது அம்மா குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அதிர்ச்சியான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். \

அதில் 2014 ஆம் ஆண்டு  டிசம்பர் மாதம் 24ந் தேதி எல்லோரும் வருஷம் முடிய போகுதுனு சந்தோஷம் இருந்திருப்பீர்கள். ஆனால் நான் அன்றைய தினம் சந்தித்த விஷயம் பெரிய துக்கமான விஷயம். ஒரு சாதாரண நாளாக ஆரம்பித்தது என் வாழ்வின் மிகக் கொடூரமான நாளாக மாறியது. நான் என் அம்மாவின் பக்கத்து வீட்டில் வசித்து வந்தேன், வழக்கம் போல் அவளுடன் ஜிம்மிற்கு செல்ல தயாராகி கொண்டிருந்தேன்.

அம்மா இருக்கும் வீட்டுக்கு சென்று காலிங்பெல்லை அழுத்தி பார்த்தேன். பலமுறை மணியை அடித்தும் கதவு திறக்காததால் பதற்றம் அதிகமாகி கதவை உடைத்துக்கொண்டு உள்ளே ஓடினேன். அப்போது என் அம்மா தூக்கில் தொங்கியபடி இருந்தார்.

அம்மா தற்கொலை செய்த போது எனக்கு வயது 23 தான் ஆகியிருந்தது. அன்று முதல் என் வாழ்க்கை அடியோடு மாறிவிட்டது. என் அம்மா என் சிறந்த தோழி, அவள் இல்லாத உலகத்தை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. நம்பிக்கையிழந்து நானும் என் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றேன். மனநலம் தொடர்பான உதவியை நாட முயற்சித்தேன் . உள்ளூர் ஹெல்ப்லைன்களை அழைத்தால் யாரும் போனை எடுக்கவில்லை. என் கணவர் தான் என்னைக் கண்டுபிடித்து எனக்கு உதவினார் என நடிகை கல்யாணி ஒரு நீண்ட பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியான நிலையில் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.