அம்மா உயிரை பறித்த அதே நோயிலிருந்து மீண்டுள்ளேன் - 'நான் ஈ' பட நடிகை உருக்கம்!
புற்றுநோயிலிருந்து மீண்ட நடிகை ஹம்சா நந்தினி அதுகுறித்து உருக்கம் தெரிவித்துள்ளார்.
ஹம்சா நந்தினி
தெலுங்கு திரையுலகில் பிரபலமானவர் நடிகை ஹம்சா நந்தினி. இவர் தமிழிலும், ‘நான் ஈ’, ‘ருத்ரமாதேவி’ ஆகிய பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த வருடம் தான் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து அதற்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். மேலும், தற்போது புற்றுநோயில் இருந்து குணமடைந்த அவர், தனது 38வது பிறந்த தினத்தை, ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கொண்டாடியதுடன் “நான் மீண்டு மீண்டும் வந்துவிட்டேன்.
இப்போது மறுபிறவி எடுத்தது போல உள்ளது. என் அம்மாவின் உயிரை பறித்த அதே புற்றுநோயில் இருந்து நான் மீண்டுள்ளேன். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் அன்பு முத்தங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.