அவர் பிறந்த அதே நாளில் இரண்டாவது குழந்தை பெற்ற நடிகை காயத்ரி யுவராஜ்

Thahir
in பிரபலங்கள்Report this article
நடிகை காயத்ரி யுவராஜுக்கு 13 ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.
காதல் திருமணம்
மானாட மயிலாட என்கிற நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் காயத்ரி. இவர் அந்நிகழ்ச்சியில் தன்னோடு நடனமாடிய யுவராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. குழந்தை பிறந்த பின்னர் சீரியலில் நடிக்க தொடங்கினார் காயத்ரி.
அதன்படி சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் என்கிற சீரியலில் நிலா என்ற கதாபாத்திரத்தில் தன்னுடைய அழகான நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் காயத்ரி.
இதையடுத்து அவருக்கு அடுத்தடுத்து பல்வேறு வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி சரவணன் மீனாட்சி, மெல்ல திறந்தது கதவு, தாமரை போன்ற சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்தார்.
கடைசியாக மீனாட்சி பொண்ணுங்க என்கிற சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோது கர்ப்பமானதால் அந்த சீரியலில் இருந்து பாதியிலேயே விலகினார் காயத்ரி.
பிறந்த அதே நாளில் குழந்தை பெற்ற நடிகை
இவருக்கு 13 வயதில் மகன் இருக்கும் நிலையில், தற்போது 2-வது குழந்தை பெற்றெடுத்துள்ளார் காயத்ரி. அவருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
நவம்பர் 16-ந் தேதியான இன்று அதிகாலை குழந்தை பிறந்ததாகவும், தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகவும் காயத்ரியின் கணவர் யுவராஜ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதோடு தன்னுடையை மகள் தனது கையை பிடித்தவாரு இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு தேவதை பிறந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
காயத்ரியின் பிறந்தநாளான இன்று அவரது மகளும் பிறந்திருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் இதைவிட சிறந்த பிறந்தநாள் பரிசு கிடைக்காது என காயத்ரிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனால் நடிகை காய்த்ரி டபுள் சந்தோஷத்தில் உள்ளார்.