திருமணமாகி 12 நாட்களில் கணவனை பிரிந்த பிரபல நடிகை - ரூ.81 கோடிக்கு உயில் எழுதிய கணவன்
பிரபல நடிகை பமீலா ஆண்டர்சனுக்கு அவருடைய முன்னாள் கணவர் ரூ.81 கோடி ரூபாய்க்கு உயில் எழுதி வைத்துள்ளார் முன்னாள் கணவன்.
5 திருமணம் செய்த நடிகை
பேவாட்ச் நடிகை பமீலா ஆண்டர்சனுக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் உள்ளனர். 53 வயதாகும் அவர் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வந்தார். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1.2 மில்லியன் பாலோவர்கள் பின்பற்றி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகினார். இதனிடையே 5 திருமணம் செய்திருந்தார் பமீலா ஆண்டர்சன்.
இவரின் முன்னாள் கணவர் ஜான் பீட்டர்ஸ், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அவரை எப்போதும் நேசிப்பேன் என்று கூறி அவருக்காக 10 மில்லியன் டாலர்களை உயில் எழுதி வைத்துள்ளது தெரியவந்துள்ளது.
ரூ. 81 கோடி சொத்து எழுதி முன்னாள் கணவன்
கடந்த 2020 ஆம் ஆண்டு ஜான் பீட்டர்சுடன் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை ஒரு மாதம் கூட நீடிக்கவில்லை. இவர்களின் திருமண வாழ்க்கை 12 நாட்களுக்குள் முடிந்துவிட்டது.
அவர்களது உறவின் முடிவைப் பற்றி கருத்து தெரிவித்த பமீலா, ஜானை சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும், அது "கடினமான உணர்வுகள் இல்லை" என்றும் கூறியிருந்தார்.
பேட்மேன், எ ஸ்டார் இஸ் பார்ன் மற்றும் மேன் ஆஃப் ஸ்டீல் உள்ளிட்ட பல பாராட்டப்பட்ட ஹாலிவுட் படங்களைத் தயாரித்தவர் ஜான் பீட்டர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. 10 மில்லியன் டாலர் என்பது இந்திய மதிப்பில் சுமார் 81 ஆயிரம் கோடி ரூபாய்.