நடிகை சித்ரா மரணத்தில் திருப்பம்... பிரபல அரசியல் தலைவருக்கு தொடர்பு... கணவர் பரபரப்பு புகார்
சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்தில் அரசியல் தலைவருக்கு தொடர்பு இருப்பதாக அவரது கணவர் ஹேம்நாத் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரை சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி சீரியல் ஷூட்டிங்குக்காக பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பிய நிலையில் இதுகுறித்து சித்ராவின் தந்தையான ஓய்வுபெற்ற எஸ்.ஐ. காமராஜ் நசரேத்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அதன் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதோடு, சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவா் ஹேம்நாத்தை கைது செய்தனா். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்த ஹேம்நாத் திடுக்கிடும் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதன்படி சித்ராவின் மரணத்தில் பிரபல அரசியல் தலைவருக்கு தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார்.மேலும் அந்த தலைவரால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அரசியல் தலைவர் யார் என்பது பற்றிய விவரம் வெளியாகும் எனவும் ஹேம்நாத் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை. தற்போது உயிருக்கு பயந்து வழக்கறிஞர் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளேன்.இதன்மூலம் நடிகை சித்ராவின் மரணத்திற்கு காரணமான அந்த அரசியல் தலைவர் யார்? அவருக்கு சித்ராவின் மரணத்திற்கும் என்ன சம்பந்தம் என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க பணம் சம்பாதிப்பதில் கில்லாடிகளாம்.. எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

இஸ்ரேலை அடித்து நொறுக்கும் ஈரான்...!: பாலிஸ்டிக் ஏவுகணைகளால் அதிரும் நகரங்கள் - பதிவான மரணம் IBC Tamil
