38 வயதில் திருமணத்துக்கு ஓகே சொன்ன பிரபல நடிகை - மாப்பிள்ளை இவர்தான்...!

Petchi Avudaiappan
in பிரபலங்கள்Report this article
சீரியல் நடிகை சந்திரா லட்சுமணன் தனது திருமண செய்தியை அறிவித்துள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த 2007 - 2008 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் ஒளிபரப்பான தொடர் ‘காதலிக்க நேரமில்லை’. இதில் ஜோடியாக நடித்த பிரஜின் - சந்திரா எந்தளவு வரவேற்பை பெற்றார்களோ அந்தளவுக்கு இந்த தொடரின் பாடலுக்கும் வரவேற்பு கிடைத்தது.
இன்றளவும் பலரின் காலர் ட்யூனாகவே அந்த பாடல் உள்ளது. 2002 ஆம் ஆண்டும் மனசெல்லாம் படத்தின் மூலம் தனது நடிப்பை தொடங்கிய சந்திரா லட்சுமணன் அதன்பின் தமிழ் மற்றும் மலையாளத்தில் சில படங்களிலும், ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார்.
38 வயதாகும் சந்திரா திருமணமாகாதவர் என்பதால் எப்போது திருமணம்? என்ற கேள்வி தொடர்ந்து அவரிடம் சமூக வலைத்தளங்களில் கேட்கப்பட்டு வந்தது. இதற்கு பதிலளித்துள்ள சந்திரா லட்சுமணன் தன்னுடன் ‘ஸ்வந்தம் சுஜாதா’ சீரியலில் நடித்து வரும் டோஷ் கிறிஸ்டியை திருமணம் செய்துக் கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளார்.