காருக்குள் பாவனா அனுபவித்த மரண வேதனை - திடுக்கிடும் சம்பவம்!

Bhavana
By Sumathi Jul 09, 2023 02:30 PM GMT
Report

பாவனாவுக்கு நடந்த கோரசம்பவம் குறித்த தகவல் தற்போது பேசுப் பொருளாகியுள்ளது.

 நடிகை பாவனா

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என வலம் வந்தவர் நடிகை பாவனா. இளைஞர்களின் கனவு கன்னியாக கொடிகட்டி பறந்தவர். மேலும், தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில், மலையாள நடிகர் திலீப்புக்கும் இன்னொரு நடிகைக்கும் தொடர்பு இருந்ததை நடிகை பாவனா திலீப்பின் மனைவியான மஞ்சுவாரியரிடம் சொல்லிவிட்டார்.

காருக்குள் பாவனா அனுபவித்த மரண வேதனை - திடுக்கிடும் சம்பவம்! | Actress Bhavana Emotional About Sexual Assault

இதனால் பாவனாவை திலீப் காருக்குள் மோசமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்தார். அந்த சம்பவம் அப்போது இந்தியாவையே உலுக்கியது. இதுகுறித்து ஒரு நேர்காணலில் பேசிய பாவனா, “நான் எத்தனையோ நடு ராத்திரிகளில் படப்பிடிப்பிற்கு சென்றிருக்கிறேன். என்னுடன் என்னுடைய மேக்கப் மேன், டச் அப் பாய் உள்ளிட்ட பலர் இருந்திருக்கிறார்கள்.

வேதனைக்கதை

எப்போதுமே என்னை சுற்றி ஒரு பாதுகாப்பான உணர்வு இருந்திருக்கிறது. ஆனால் அந்தக்காருக்குள் எனக்கு நடந்த சம்பவம் என்னை மிகவும் உலுக்கிவிட்டது. அதிலிருந்து நான் வெளியே வருவதற்கு பல நாட்கள் ஆயிற்று. எனக்கு நேர்ந்த அந்தக் கொடுமை வேறொரு பெண்ணுக்கு நடந்திருந்தால் அந்த பெண் நிச்சயம் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டிருப்பார்.

காருக்குள் பாவனா அனுபவித்த மரண வேதனை - திடுக்கிடும் சம்பவம்! | Actress Bhavana Emotional About Sexual Assault

அதையும் மீறி நான் நிற்கிறேன் என்றால் அதில் நான் என்ன தவறு செய்தேன் என்பதுதான். நான் மீண்டெழுந்து காண்பித்து இருக்கிறேன். ” எனத் தெரிவித்தார்.

அந்த சமயத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்தது கன்னட சினிமா. அந்த சம்பவத்திற்கு பிறகு கன்னட சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சிவராஜ் சிவக்குமார் தன்னுடைய படத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுத்து ஒரு ரீ என்ட்ரி கொடுக்க வைத்தார் .அதன் பின்னர் அவர் நடிப்பில் வெளியான படங்கள் வெற்றியை பெற்றதாக பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.