‘நான் ஒன்னும் வேணான்னு சொல்லல..’ - திருமணம் குறித்த கேள்விக்கு கூலாக பதிலளித்த ஆண்ட்ரியா ; என்ன சொல்லிருக்காங்க தெரியுமா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆண்ட்ரியா கோலிவுட்டில் ஒரு பாடகியாக கால் பதித்து பின்னர் நடிகையாக உருவெடுத்தவர் ஆவார்.
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் முதன்முதலாக் நடிகையாக அறிமுகமான ஆண்ட்ரியா பின்னர் ஆயிரத்தில் ஒருவன், தரமணி, வடசென்னை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
படத்தில் தனது காதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கிறதா என்பதை மனதில் வைத்து படங்களுக்கு ஓகே சொல்லும் ஆண்ட்ரியா இதுவரை அப்படிபட்ட கதைகளையே தேர்வு செய்தும் அதில் நடித்தும் உள்ளார்.
பல படங்களில் இவர் போல்டான கதாப்பாதிரங்களை தேர்வு செய்து நடித்ததன் மூலமே ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக இருக்கிறார்.
இவர் நடிப்பில் கடைசியாக மாஸ்டர் மற்றும் அரண்மனை படங்கள் வெளியான நிலையில் தற்போது பிசாசு படத்தின் 2-ம் பாகத்திலும் நோ எண்ட்ரி என்ற படத்திலும் ஆண்ட்ரியா நடித்து வருகிறார்.
இதில் பிசாசு 2 படம் முழுமையாக நிறைவுபெற்று ரிலீசுக்கான தேதி விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கபடுகிரது.
இந்நிலையில், ஊடகத்திற்கு அண்மையில் பேட்டியளித்த ஆண்ட்ரியாவிடம் திருமணம் எப்போது என கேள்வி எழுப்பபட்டது, அதற்கு, “நான் ஒன்னும் வேணான்னு சொல்லல…என்னை ஏன் யாரும் கல்யாணம் செய்து கொள்ள வர மாட்டேங்குராங்கனு தெரியல்ல.
ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக திருமணம் செய்து கொள்ள முடியாது. நான் திருமணம் செய்துகொள்ள தகுந்த நபரை இன்னும் சந்திக்கவில்லை” என கூலாக பதிலளித்துள்ளார்.