கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாம நடந்துக்கிட்டாங்க...அமலா பால் மீது குற்றசாட்டு!

Amala Paul Minthirai Tamil Cinema Actress
By Swetha Jul 01, 2024 08:02 AM GMT
Report

அமலா பால் எனக்கு பல இன்னல்களை கொடுத்தார் என மேக்கப் ஆர்ட்டிஸ்ட் குற்றசாட்டு வைத்துள்ளார்.

அமலா பால்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். மைனா படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரிட்சயமானார். அந்த வெற்றியை தொடர்ந்து தெய்வ திருமகள், வேட்டை, முப்பொழுதும் உன் கற்பனையில், தலைவா, வேலையில்லா பட்டதாரி, அம்மா கணக்கு, ஆடை போன்ற பல படங்களில் நடித்தார்.

கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாம நடந்துக்கிட்டாங்க...அமலா பால் மீது குற்றசாட்டு! | Actress Amala Paul Behaved With No Mercy

முன்னதாக இயக்குனர் ஏஎல் விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார். சில ஆண்டுகளுக்கு பின், தனது நீண்ட நாள் நண்பரான ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்ட அமலா பால் சமீபத்தில் ஆண் மகனை பெற்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அமலா பால் குறித்து வட இந்தியாவின் பிரபல சினிமா மேக்கப் கலைஞரும், சிகையலங்கார நிபுணருமான ஹேமா பேசுகையில், ஒருமுறை அமலா பாலுடன் படப்பிடிப்பு ஒன்றுக்கு சென்றிருந்தேன்.அது ஏப்ரல், மே மாதம் என்பதால் கடும் வெயில், லொகேஷனில் நிழலில் நிற்பதற்கு ஒரு மரம் கூட இல்லை.

குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டேன்; அடம்பிடித்த அமலா பால் - போட்டுடைத்த பிரபலம்!

குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டேன்; அடம்பிடித்த அமலா பால் - போட்டுடைத்த பிரபலம்!

மனிதாபிமானம் இல்ல..

நீண்ட நேரம் வெயிலில் அவதிப்பட்ட நானும் சில பெண்களும் ஒரு கேரவனுக்குள் சென்று அமர்ந்தோம். ஆனால் நாங்கள் உட்கார்ந்த சில நிமிடங்களில் அமலாபால் தன் மேனேஜரை அனுப்பி எங்களை வெளியேற்றும்படி சொன்னார்.

கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாம நடந்துக்கிட்டாங்க...அமலா பால் மீது குற்றசாட்டு! | Actress Amala Paul Behaved With No Mercy

அந்த கடும் வெயிலில் நாங்கள் எங்கே போய் நிற்பது என்று யோசித்தோம், ஆனால் நங்கள் கேரவனை விட்டு இறங்குவரை அமலா பால் விடவேயில்லை. அதன் பின் வேறுவழியில்லாமல் நாங்கள் கேரவனை விட்டு இறங்கினோம்.அந்த படப்பிடிப்பு முடியும்வரை இதுபோன்ற நிறைய சம்பவம் எனக்கு ஏற்பட்டது.

பல முன்னணி நடிகைகளுக்கு நான் மேக்கப் போட்டுள்ளேன் அவர்கள் அனைவருமே கனிவுடன் நடந்து கொள்வார்கள். குறிப்பாக நடிகை தபு எங்களை போன்றவர்களுக்கு அவரே வேன் புக் செய்து நன்றாக பார்த்துக்கொள்வார்.

ஆனால், நடிகை அமலா பால் கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொண்டார் என்று ஹேமா தனது கசப்பான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.