விக்ரமுடன் ரொமான்ஸ் வரல வாந்தி தான் வந்துச்சு - பிரபல நடிகை ஐஸ்வர்யா ஓபன் டாக்!

Vinothini
in பிரபலங்கள்Report this article
பிரபல நடிகை நடிகர் விக்ரமுடன் நடித்த அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா
பரபல நடிகையான ஐஸ்வர்யா தெலுங்கில் வெளியான அடவிலோ அபிமன்யூ என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர்.
பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகளான இவர், பாக்யராஜூடன் ராசுக்குட்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளர்.
அந்த வகையில் மில் தொழிலாளி, தையல்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து, இவர் மீரா என்ற படத்திலும் நடிகர் விக்ரமுடன் நடித்திருப்பார்.
பேட்டி
இந்நிலையில், அவர் விக்ரமுடன் நடித்த படத்தில் வரும் ஒரு முத்த கட்சி குறித்து கூறியுள்ளார். அதில் அவர், "விகரம் ஒரு சிறந்த நடிகர். நடிப்புக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர். அவருடன் நடித்த அனுபவங்கள் மறக்க முடியாதது.
மீரா படத்தின் லிப்லாக் காட்சி ஒரு ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டது. அந்த ஸ்டூடியோவில் முழங்கால் அளவு தண்ணீர் நின்றது.
எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. இந்த முழங்கால் தண்ணீரில் நடந்து சென்று நடிக்க வேண்டும் ஆனால் லைட்மேன் உள்ளிட்ட பல கால் வைத்த இடம்.
ரொம்ப அழுக்காக இருந்தது. இந்த காட்சி படமாக்கப்படும்போது உண்மையில் எனக்கு ரெமான்ஸ் வரவில்லை என்று கூறியுள்ளார்.
அதேபோல் அந்த படத்தின் படப்பிடிப்பின்போது விக்ரம் நானும் எலியும் பூனையுமாக இருந்தோம் பாதியில் தான் நானும் அவரும் ஒன்றாக இணைந்து நடித்தோம்" என்றும் கூறியுள்ளார்.