நடிகை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு - புதிய ஆடியோ ஆதாரம் வெளியானது!
நடிகையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நடைகை காவ்யா மாதவன் உடந்தையாக இருந்தது தொடர்பான புதிய ஆடியோ ஆதாரம் வெளியானது.
கேரளாவில் பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் நடிகர் திலீபின் மனைவி நடிகை காவியா மாதவனுக்கு தொடர்பு உள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக ஆடியோ ஆதாரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் நடிகர் திலீப்பனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகை பாலியல் அத்துமீறல் வழக்கில்
,நடிகர் திலீப்பின் சகோதரி கணவன் சூரஜ் என்பவரும் அவரது நண்பர் சரத்தும் உரையாடும் 3 செல்போன் உரையாடல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
வெளியான ஆடியோ ஆதாரம் மூலம் காவ்யா மாதவனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.