விபத்தில் சிக்கிய காமெடி நடிகர் கணேஷ்
காமெடி நடிகை ஆர்த்தியின் கணவரும் நகைச்சுவை நடிகருமான கணேஷ்கர் சென்னை பட்டினப்பாக்கத்தில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காமெடி நடிகர் கணேஷ்கர் அரண்னை,இது கதிர்வேலன் காதலன்,கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.
இவர் கடந்த 2009 -ஆம் ஆண்டு நகைச்சுவை நடிகை ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தன.
இந்நிலையில் நடிகர் கணேஷ்கர் கடந்த சனிக்கிழமை இரவு தன்னுடைய காரில் பட்டினப்பாக்கம் லுாப் சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த வாகன ஓட்டியும் கட்டுப்பாட்டை இழந்து காரில் மோதி கீழே விழுந்தார். பயங்கர சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஒன்று கூடிய போது கணேஷ் காரை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி உள்ளார்.
விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்காக அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் மருத்துவமனைக்கு சென்ற போது அங்கு கணேஷ்கர் இல்லை என்பது தெரியவந்தது.
இதையைடுத்து இவர் வீட்டிற்கு சென்றிருப்பார் என்று நினைத்து போலீசார் அவரது வீட்டிற்கு சென்று தேடியுள்ளனர்.அப்போது வீட்டில் இருந்த நடிகையும் அவரது மனைவியுமான ஆர்த்தி அவர் வீட்டில் இல்லை என கூறியுள்ளார்.
இதனிடையே அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விடிய விடிய அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அவரை தீவிரமாக தேடியும் கிடைக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதிவேகத்தில் கார் ஓட்டினாரா அல்லது மது போதையில் கார் ஓட்டினாரா என்பது குறித்து அவரை பிடித்தால் தான் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.