இரவில் ஒளிர்ந்த இரட்டை நிலா... - த்ரிஷாவை வர்ணிக்கும் ரசிகர்கள்...!

Trisha Viral Photos
By Nandhini Oct 10, 2022 11:31 AM GMT
Report

நடிகை த்ரிஷா வெளியிட்ட புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

‘பொன்னியின் செல்வன்’ படம்

தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனராக விளங்கும் மணிரத்னம், தனது கனவு படமான பொன்னியின் செல்வனை வெற்றிகரமாக இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம் பிரபு, சரத்குமார், ஜெயராம், பாலாஜி சக்திவேல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 30ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்போடு திரையரங்கில் வெளியானது. தற்போது இப்படம் மக்களின் பேராதரவுடன் மாபெரும் வசூலை அள்ளி வெற்றிப்படைத்துள்ளது.

இப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷா நடித்துள்ளார். அப்படத்தில் குந்தவையின் உடை, நகை, அலங்காரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்துள்ளது.

actrees-trisha-viral-photos

இரவில் ஒளிர்ந்த இரட்டை நிலா

இந்நிலையில், நடிகை த்ரிஷா தனது சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படப் பதிவில், முழு நிலவு விஷயங்கள் மற்றும் அனைத்திலும் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்த புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள்.. அழகியே... உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே ... என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.