அந்த ஒரு நடிகருக்காக தன் பழக்கத்தை மாற்றிய மீனா... அவர் யாருன்னு தெரியுமா...?
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை மீனா. இவர் குழந்தையிலிருந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். நடிகை மீனாவிற்கும், பெங்களூரூவை சேர்ந்த கணிணி பொறியாளர் வித்யாசாகருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இத்தம்பதிகளுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.
வித்யாசாகர் மரணம்
நடிகை மீனா தற்போது கோட்டூர்புரம் பகுதியில் உள்ள ஸ்ரீநகர் காலனி அவென்யூவில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு மீனாவின் கணவர் வித்யாசகருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட வித்யாசாகருக்கு நுரையீரல் பிரச்சினை ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்த வித்யாசகர் சிகிச்சை பலனின்றி சமீபத்தில் உயிரிழந்தார்.
அந்த ஒரு நடிகருக்காக தன் பழக்கத்தை மாற்றிய மீனா
இந்நிலையில், நடிகை மீனா குறித்து தற்போது ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.
சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் பேசும் போது, நடிகை மீனா குறித்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில்,
தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே, நடிகை மீனா தெலுங்கு உலகில் நன்கு அறிமுக நடிகையாக வலம் வந்தார். தன் சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த முதலிலிருந்து இப்போது வரைக்கும் மீனா கடைபிடிக்கும் ஒரே ஒரு விஷயம் படப்பிடிப்பிற்கு சரியான நேரத்திற்கு வருவாராம்.
அப்பழக்கத்தை கற்றுத் தந்ததே பிரபல தெலுங்கு நடிகர் நாகேஷ்வர ராவ்தான். இருவரும் சேர்ந்து படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கும்போது, மீனாவிடம் நாகேஷ்வர ராவ் ஒரு விஷயம் சொன்னார்.
‘நீ யாருக்காகவும் காத்திருக்கலாம், ஆனால் உனக்காக யாரும் காத்திருக்க கூடாது’. இந்தப் பழக்கத்தை மட்டும் எப்போது கற்று வைத்துக் கொள். எப்போதும் மனதில் நிறுத்தி வைத்துக் கொள் என்று சொன்னார். இதை மனதில் வாங்கிய நடிகை மீனா, அன்றிலிருந்து இன்று வரைக்கும் கடைபிடித்து வருகிறார்.
எந்த தயாரிப்பாளர்களிடம் கேட்டாலும் மீனாவை பற்றி இதுவரை யாரும் எதுவும் தவறாக சொன்னது கிடையாது. எந்த தயாரிப்பாளருக்கும் மீனாவால் எந்த நஷ்டமும் வந்தது கிடையாது என்றார்.