பல பெண்களுடன் உறவு வைத்துக் கொண்ட பிரபல நடிகர் - பட நிகழ்ச்சியில் வெளியான உண்மை
பல பெண்களுடன் நான் உறவு வைத்துள்ளேன் என பிரபல நடிகர் ஒருவர் பேட்டியின் போது தெரிவித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தமிழில் திமிரு, மரியான், சிறுத்தை, சிலம்பாட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் மலையாள திரையுலகில் முன்னணி நடிகரான விநாயகன். இவர் சமீபத்தில் கொச்சியில் தனது புதிய படமான ‘ஒருத்தி’ படத்தின் புரமோஷனின் ஒரு பகுதியாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது கேரளாவில் மீ டூ பற்றி பலரும் பேசி வருகிறார்கள். அது என்னவென்று தனக்கு புரியவில்லை என்றும், ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி உறவு வைத்து கொள்வது தான் மீ டூ வா? எனவும் தெரியவில்லை என்றும் கூறினார்.
மேலும் ஒரு பெண்ணை பார்க்கும் போது அந்த பெண்ணை எனக்கு பிடித்திருந்தால் நான் அந்த பெண்ணிடம் நேரடியாக சென்று என்னுடன் உறவு கொள்ள விருப்பமா? என்று கேட்பேன். அவர் விருப்பம் தெரிவித்தால் அவருடன் உறவு வைத்து கொள்வேன்.
இப்படி நான் பலரிடம் உறவு வைத்துள்ளேன், என்றார். விநாயகனின் இந்த பேட்டிக்கு பல்வேறு அமைப்பினரும், பெண்கள் அமைப்பும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு பெண்ணிய அமைப்பை சேர்ந்தவர்களை ஆபாசமாக விமர்சனம் செய்ததற்காக விநாயகன் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இப்போது விநாயகன் மீண்டும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.