‘எந்த பக்கம் போனாலும் இருக்காருய்யா இவரு’ - தன்னை பற்றி வலம்வந்த மீம்சுகள் குறித்து முதன்முறையாக மக்கள்செல்வன் பேச்சு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.
தன் எளிமையான தோற்றம், தனித்துவமான நடிப்பு ஸ்டைல் மற்றும் தன் அன்பால் ரசிகர்களை கட்டிப்போட்டு தனக்கென தனி பானியை த்மிழ் சினிமாவில் அமைத்துக்கொண்டார் இவர்.
இவர் நடிப்பில் கடைசி விவசாயி படம் ஒடிடி தளமான சோனி லிவ்-இல் நேரடியாக அண்மையில் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் நடிகர் விஜய் சேதுபதி பற்றிய மீம்கள் சமீபத்தில் வைரலாக பரவத்தொடங்கின. எங்கு சென்றாலும் விஜய் சேதுபதி தான் இருக்கிறார் என்ற வகையில் மீம்கள் ரௌண்டு அடித்தன.
இதற்கு காரணம், ஒரு நடிகர் ஒரு திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து முடிப்பதற்கே போதும் போதும் என்ற நிலைக்கு வந்துவிடுவார்கள்.
ஆனால் விஜய் சேதுபதியோ வேறு ரகம், ஒரு வருடத்தில் குறைந்தது 3 அல்லது 4 படங்கள் கொடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவது இவரது வழக்கம்.
படங்களின் வெற்றி தோல்வி பற்றி இவர் எப்பொழுதும் கவலை பட்டதே இல்லை. இது என்னுடைய தொழில் நான் என் தொழிலை செய்கிறேன் என படு கூலாக பதில் சொல்லக்கூடியவர்.
இது குறித்த மீம்கள் தான் அண்மையில் இணையத்தை கலக்கியது. இந்நிலையில் இது குறித்து முதன் முறையாக பேசியுள்ளார் அவர்.
‘என்னுடைய மூன்று திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியானதையடுத்து பல்வேறு மீம்கள் வெளியானதுதான் இதைப் பேசுபொருளாக்கியது.
அந்த மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியானதற்கான காரணம் எனக்கு மட்டும்தான் தெரியும்.
அப்படங்கள் குறித்து மக்கள் மத்தியில் சிறிது அதிருப்தி இருந்தாலும் அது வேண்டுமென்றே தேவையில்லாத நாடகம் ஆக்கப்பட்டது.
அதைச் செய்தது யார் என்றும் எனக்குத் தெரியும். ஆனால், அவர்கள் என்னைப் பற்றிப் பேசவில்லை. என் கலையை, வேலையைப் பற்றிதான் பேசியுள்ளார்கள். அவர்களுக்கு என் வேலை மூலமாகத்தான் நான் பதில் சொல்வேன்’ என பதிலளித்துள்ளார்.