பிரபல நடிகர் மனைவியை கட்டி போட்டு 200 சவரன் நகை திருட்டு - சென்னையில் பரபரப்பு

Chennai Tamil Nadu Police
By Thahir Nov 11, 2022 12:12 PM GMT
Report

பிரபல நடிகர் ஆர்கே வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் எல்லாம் அவன் செயல், அவன் இவன், அழகர் மலை, ஜில்லா போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஆர்கே.

பிரபல நடிகர் மனைவியை கட்டி போட்டு 200 சவரன் நகை திருட்டு - சென்னையில் பரபரப்பு | Actor Tied Up His Wife And Stole Jewelry

இவர் சென்னையில் நந்தம்பாக்கம் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி ராஜி. 53 வயது நிறைந்தவர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

ஏராளமான பங்களாக்கள் இருக்கும் அப்பகுதியில் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடியே காணப்படும். இந்த நிலையில் நேற்று ஆர்கே வெளியே சென்றபோது அவரது வீட்டிற்குள் பின்பக்க வழியாக நுழைந்த கொள்ளையர்கள் கூர்மையான கத்தியை காட்டி ஆர்கேவின் மனைவியை மிரட்டியுள்ளனர்.

பிரபல நடிகர் மனைவியை கட்டி போட்டு 200 சவரன் நகை திருட்டு - சென்னையில் பரபரப்பு | Actor Tied Up His Wife And Stole Jewelry

பின்னர் அவரைக் கட்டி போட்டுவிட்டு பீரோவில் இருந்த 200 சவரன்க்கு மேல் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இந்த நிலையில் வீடு திரும்பிய ஆர்கே தனது மனைவியை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அவரது வீட்டிற்கு விரைந்த போலீஸார்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஆர்கே வீட்டில் இதற்கு முன்பு காவலாளியாக பணிபுரிந்து வந்த ரமேஷ் என்பவர்தான் பக்காவாக பிளான் போட்டு தனது நண்பர்களுடன் வந்து வீட்டில் கொள்ளையடித்து சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக அவரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.