'அண்ணன் முகத்த பார்க்க முடியல' - விஜயகாந்த் நினைவிடத்தில் தேம்பி அழுத நடிகர் சூர்யா!

Suriya Vijayakanth Tamil Cinema DMDK Tamil Actors
By Jiyath Jan 05, 2024 06:21 AM GMT
Report

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் தேம்பி அழுதபடி நடிகர் சூர்யா அஞ்சலி செலுத்தினார்

விஜயகாந்த் மறைவு

தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த 28-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து திரும்பிய நடிகர் சூர்யா இன்று விஜயகாந்த் நினைவிடத்தில் தேம்பி அழுதபடி அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் "அண்ணனின் பிரிவு மிகவும் துயரமானது.

நடிகர் சூர்யா அஞ்சலி

அஞ்சலி பெரியண்ணா படத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. முதல் நாளிலேயே என்னை அழைத்து அவருடன் சாப்பிட வைத்தார்.

அவரின் தட்டிலிருந்து சாப்பாட்டை எடுத்து எனக்கு ஊட்டி விட்டார். அண்ணனை போல யாரும் இல்லை. இறுதியாக அவரின் முகத்தை பார்க்க முடியாதது எனக்கு ஈடு செய்ய முடியாத இழப்புதான். எப்போதும் அவரின் நினைவு இருக்கும்.

நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயர் சூட்டுவதற்கு, எனக்கு சம்மதமே. நடிகர் சங்கத்தை மீட்டெடுத்ததில் அவருக்கு பெரும் பங்கு உண்டு என்றார்.