அய்யோ.. நைட் ஆனா போதும் தனுஷ் என்னலாம் பண்ணுவாரு தெரியுமா? - நடிகர் ஓபன் டாக்!

Vinothini
in பிரபலங்கள்Report this article
திரையுலக பிரபலம் ஒருவர் நடிங்கர் தனுஷ் குறித்து வெளிப்படையாக பேட்டியில் கூறியுள்ளார்.
பிரபல நடிகர்
கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகனும் முன்னணி நடிகருமான சிவராஜ்குமார், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்ததாக கூறியுள்ளார். இவர் அந்த படத்தில் வெறும் 11 நிமிடங்கள் தான் வருவேன் என்று கூறியுள்ளார்.
பின்னர் இவர், நடிகர் தனுஷ், பிரியங்கா மோகன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள கேப்டன் மில்லர் படத்தில் மெயின் வில்லனாக நடித்துள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் தனுஷ் குறித்த பேசியுள்ளார்.
நடிகர் பேட்டி
இந்நிலையில், இந்த கன்னட நடிகர், தனுஷ் குறித்து பல விஷயங்களை கூறியுள்ளார். அதில் அவர், "நடிகர் தனுஷ் ஷூட்டிங் ஸ்பாட்டில் செம ஃபன் பண்ணுவார், நைட் ஆனா போதும், சார் வாங்கனு எங்கயாவது ஒரு ரெஸ்டாரன்ட்டுக்கு கூட்டிட்டுப் போயிடுவாரு, கடை சின்னதா தான் இருக்கும்.
ஆனால், டேஸ்ட் வேறலெவல்ல இருக்கும், குற்றாலத்துல ஷூட்டிங் பண்ணிட்டு இருந்தப்போ நைட் அம்மா மெஸ்க்கு போய் ஒரே அலப்பறை ஆகிடுச்சு" என்று கூறியுள்ளார். இது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

Today Gold Rate: மீண்டும் அதிகரித்து அதிர்ச்சி கொடுத்த தங்கத்தின் விலை! கவலையில் நகை பிரியர்கள் Manithan
