“கோவத்துல கட்டியிருந்த வேட்டிய கழட்டி வீசிட்டேன்” - சூர்யவம்சம் படப்பிடிப்பின்போது நடந்த சுவாரஸ்யம் குறித்து சரத்குமார் பேச்சு

interview sarathkumar radhika throwback surya vamsamfilm chit chat nostalgic memories
By Swetha Subash Jan 30, 2022 06:29 AM GMT
Report

நடிகை ராதிகாவும் நடிகர் சரத்குமாரும் கடந்த 2001-ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். திருமணத்திற்கு முன்னதாக இருவரும் ஒன்றாக திரையில் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் சூர்ய வம்சம்.

விக்ரமன் இயக்கத்தில் கடந்த 1997-ம் ஆண்டு வெளிவந்து சக்கப்போடு போட்ட சூர்ய வம்சத்தின் ஷூட்டிங் சமயத்தில் நடந்த சுவார்ஸ்யத்தை இருவரும் தற்போது பகிந்துள்ளனர்.

இது குறித்து நடிகர் சரத்குமார் கூறுகையில்,

“நான் சூர்ய வம்சம் திரைப்படத்திற்காக வேட்டி , சட்டையெல்லாம் அணிந்துக்கொண்டு ரெடியாகிவிட்டேன். ஆனால் ஷூட் தாமதமாகும் என கூறியதால் ஓரமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன்.

அப்போது என்னை கடந்து சென்ற ராதிகா, சரத் என அழைத்தார். என்னை இன்னும் அழைக்கவில்லை நான் வருகிறேன் போ என்றேன்.

அதன் பிறகு போனை கட் செய்துவிட்டு வரும்பொழுது விக்ரமனும் ராதிகாவும் நின்று பேசிக்கொண்டிருந்தனர். நான் விக்ரமனுக்கு பின்னால் இருந்ததை விக்ரமன் கவனிக்கவில்லை.

ராதிகாவிடம், ‘இந்த ஹீரோ எப்போ பார்த்தாலும் கேர்ள் பிரண்ட்ஸோட பேசிட்டே இருக்காரு.. ’அப்படி இப்படி என என்னை திட்டிக்கொண்டிருந்தார்.

நான் கோபத்தில் ஷூட்டிங்கிற்கு மார்க் போட்டிருந்த இடத்தில் வந்து நின்றேன். உதவியாளர் மார்க் இதுதான் என விளக்கம் கொடுக்க அவர்க்கிட்ட “தெரியும் போ” என்றதும் என்ன கோவமா இருக்காரு என சென்றுவிட்டார்.

அதன் பிறகு இப்படி நில்லுங்கள்.. டயலாக் இதுதான் என மாறி மாறி எல்லோரும் சொன்னதும் வேட்டியை கழட்டி போட்டுவிட்டு சென்றுவிட்டேன்.. ராதிகா பக்கத்தில் நின்று கூல் கூல் என சொல்லிக்கொண்டிருந்தவர் திடீரென ஷாக் ஆகிவிட்டார்.

ஆனா இன்னைக்கு வரைக்கும் ஏன் வேட்டியை கழட்டி வீசினேன்னு எனக்கு தெரியலை. அதன் பிறகு விக்ரமன் சமாதானம் செய்து நடிக்க வைத்தார்.” என சூர்ய வம்சம் சமயத்தில் நடந்த சுவாரஸ்யத்தை பகிர்ந்துள்ளார் சரத்குமார்.