அது நான் இல்லை - நிர்வாண போட்டோ சர்ச்சையில் அந்தர் பல்டி அடித்த ரன்வீர்!
ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படங்கள் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது ஷாக் ஸ்டேட்மெண்ட் ஒன்றை அளித்துள்ளார்.
ரன்வீர் சிங்
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நிர்வாண போட்டோ ஷூட் படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, பாப் கலாச்சாரத்தின் அடையாளமும் நடிகருமான பர்ட் ரெனால்ட்ஸ்க்கு இந்த புகைப்படங்களைச் சமர்ப்பிப்பதாக ரன்வீர் தெரிவித்திருந்தார்.
இப்புகைப்படங்கள் அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற அதே சமயம் பல கண்டனங்களுக்கும் உள்ளானது. இச்செயல் பெண்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கூறி, ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அதிகாரி செம்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
நான் அவன் இல்லை
இதையடுத்து ரன்வீர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது போன்ற நிர்வாண புகைப்படங்களைப் பகிர்ந்ததற்காக நடிகர் ரன்வீர் சிங் காவல் நிலையத்தில் ஆஜராகி நேரில் விளக்கம் கொடுக்க சம்மன் அனுப்பப்பட்டது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ரன்வீர், தன்னுடைய அரை நிர்வாண போட்டோஷூட்களை சமூக வலைதளங்களில் பகிரும் போது இந்த அளவிற்கு விவாதம் கிளம்பும் என எதிர்ப்பார்க்கவில்லை என வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதனையடுத்து, தற்போது தனது போட்டோ மார்பிங் செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்து புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். இதனை ரன்வீர் சிங் கூறியதாக செம்பூர் போலீஸார் தெரிவித்துள்ளனர்.