டான் படத்தை பார்த்து கண்ணீர்விட்ட ரஜினி..படக்குழுவினருக்கு போன் செய்து பேசியது என்ன?

Rajinikanth Sivakarthikeyan
By Swetha Subash May 19, 2022 08:29 AM GMT
Swetha Subash

Swetha Subash

in சினிமா
Report

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “டான்”. இந்த படத்தை லைக்கா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த படம் கடந்த மே 13-ந் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பெரிய எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்த டான் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று தற்போது வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

டான் படத்தை பார்த்து கண்ணீர்விட்ட ரஜினி..படக்குழுவினருக்கு போன் செய்து பேசியது என்ன? | Actor Rajinikanth Praises Don Crew Over Phone

அதன்படி தற்போது வரை இப்படம் உலகளவில் ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் புரிந்து சாதனை படைத்திருக்கிறது.

மேலும் சிவகார்த்திகேயனின் முந்தைய படமான டாக்டர் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது, அப்படத்தை விட இந்த டான் திரைப்படம் அதிக வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ள டான் திரைப்படைத்து பாரத்துவிட்டு ரசிகர்கள் உற்சாகமடைந்து படகுழுவினரி புகழ்ந்து வருகின்ரனர்.

டான் படத்தை பார்த்து கண்ணீர்விட்ட ரஜினி..படக்குழுவினருக்கு போன் செய்து பேசியது என்ன? | Actor Rajinikanth Praises Don Crew Over Phone

இந்நிலையில் டான் படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த படக்குழுவினருக்கு போனில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

படக்குழுவினருடன் போனில் பேசிய ரஜினி, ‘சூப்பர்ப்பா..கடைசி 30 நிமிடம் என்னுடைய கண்ணீரை தடுக்க முடியல’ என தெரிவித்ததாக கூறப்படுகிறது.