விரைவில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது - தேதி அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி
நடிகர் ரஜினிகாந்திற்கு எப்போது தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படும் என்பதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் புகழ்பெற்ற நடிகராக திகழ்பவர் ரஜினிகாந்த். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம் மற்றும் ஆங்கிலம் என இந்தியாவின் பலமொழிகளில் சுமார் 160க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
பல முன்னணி திரைப்படங்களில் நடித்து இன்றும் முன்னணி நடிகராக திகழ்பவரே நடிகர் ரஜினிகாந்த். ஏற்கனவே பல விருதுகளை பெற்றுள்ள இவருக்கு மத்திய அரசின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படும் என கடந்த ஏப்ரல் மாதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
திரைத்துறையில் சாதனை புரிந்ததற்கு ரஜினிக்கு இந்த விருதை வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 25-ஆம் தேதி டெல்லியில் நடக்கும் 51வது விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தாதா சாகிப் பால்கே விருதை வழங்கவிருப்பதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.