2வது திருமணத்துக்கு தயாராகும் பிரபல முன்னணி நடிகர் - யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் பிரசாந்த 2வது திருமணத்துக்கு தயாராவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகரும், தயாரிப்பாளருமான தியாகராஜனின் மகன் பிரசாந்த் தனது 17 வது வயதில் வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே ஹிட்டானதால் பல டைரக்டர்களும் பிரசாந்த்தை தேடி வந்து வாய்ப்பு கொடுத்தனர். அன்றைய தினத்துக்கு விஜய், அஜித் ஆகிய முன்னணி நடிகர்களை ஓரம் கட்டும் அளவுக்கு அவரது வளர்ச்சி இருந்தது.
குறிப்பாக வண்ண வண்ண பூக்கள், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, பார்த்தேன் ரசித்தேன், திருடா திருடா, பிரியாத வரம் வேண்டும் உள்ளிட்ட பல படங்கள் இன்றளவும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பில் உள்ளது. ஆனால் 2005 ஆம் ஆண்டின் பின்பகுதியில் அவர் நடித்த படங்கள் சரியாக ஓடாததால் பல ஆண்டுகளாக நடிக்காமலும், வேறு மொழி படங்களிலும் தலை காட்டினார்.
இதனிடையே 2005 ஆம் ஆண்டு கிரகலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார் பிரசாந்த். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்த திருமணம் மூன்றே ஆண்டுகளில் பிரிவில் முடிந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது மீண்டும் அப்பா தியாகராஜன் இயக்கி தயாரிக்கும் அந்தகன் படத்தில் பிரசாந்த் நடித்து வருகிறார்.
இந்நிலையில் 48 வயதாகும் பிரசாந்த்திற்கு இரண்டாவது திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் திருமணம் தோல்வி அடைந்ததுடன், சமீபத்தில் தான் விவாகரத்து பெற்றுள்ளார். எனவே இந்த ஆண்டு இறுதிக்குள் பிரசாந்த்தின் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பிரசாந்த் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.