மேடையில் கோபமடைந்து மைக்-ஐ தூக்கி வீசிய நடிகர் பார்த்திபன்; அதிர்ச்சியில் உறைந்த ஏ.ஆர்.ரஹ்மான் - என்ன காரணம்?
தமிழ் திரையுலகில் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர் நடிகர் பார்த்திபன். இவர் இயக்குனர் , தயாரிப்பாளர், கதையாசிரியர், எழுத்தாளர் என பல திறமைகளை கொண்டவர்.
கடந்த 2019-ம் ஆண்டு இவர் இயக்கிய ‘ஒத்த செருப்பு அளவு 7’ படம் இந்திய சினிமாவின் கவனத்தை ஈர்த்து தேசிய விருதை பெற்று சாதனை படைத்தது.
வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைக்கும் பார்த்திபன் சில மாதங்களுக்கு முன்பு ஒரே ஷாட்டில் ஒரு படத்தை எடுக்க உள்ளதாகவும், அப்படத்திற்கு ‘இரவின் நிழல்’ என பெயர் வைத்துள்ளதாகவும் அறிவித்திருந்தார்.
96 நிமிடங்கள் ஓடும் இப்படம், ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டு உலக சாதனை படைத்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்றது. இதில் பார்த்திபன், ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டு படத்தின் முதல் பாடலை வெளியிட்டனர்.
அப்போது, நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பார்த்திபனின் மைக் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை. இதனால் கோபமான பார்த்திபன் அந்த மைக்கை கீழே தூக்கி எறிந்தார்.
பார்த்திபனின் இந்த நடத்தையை சற்றும் எதிர்பார்க்காத ஏ.ஆர்.ரஹ்மான் அதிர்ச்சி அடைந்தார்.
அதன் பின் பேசிய பார்த்திபன், “பொதுவாக நான் இந்த மாதிரி மேடைகளில் எமோஷனலாகி விடுவேன்.
ஏனென்றால், எல்லாம் சரியாக இருக்க வேண்டுமென்று நினைப்பேன். ஏ.ஆர். ரஹ்மான் ஒரு ஷீல்டு கொடுத்தார். அதை தூக்கும் போது எனக்கு கை கொஞ்சம் சுளுக்கு பிடித்துவிட்டது. என்னால் வெளியில் கத்த முடியவில்லை.
#Parthiban loses cool & throws mic at the audience during his upcoming film #IravinNizhal launch event. Leaves #ARRahman & the audience shocked. This movie is said to be the world’s first non-linear single-shot film pic.twitter.com/OMud3Xon6v
— Movement Creations Bollywood (@mcreationsbolly) May 2, 2022
அந்த சமயம் பார்த்து மைக் வேலை செய்யவில்லை. அந்த கோபத்தில் நான் மைக்கை தூக்கி போட்டு விட்டேன். நான் செய்தது அநாகரிகமான செயல் தான். அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்திருந்தார்.