நடிகை நயன்தாராவின் சம்பளம் இத்தனை கோடிகளா..! திக்குமுக்காடும் தயாரிப்பாளர்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை நயன்தாரா தனது சமபளத்தை கிடுகிடுவென உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளா மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் நடிகை நயன்தாரா.2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
2005ஆம் ஆண்டு ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இவர் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.
37 வயதாகும் நடிகை நயன்தாரா இளமைக்கு சொந்தகாரர் ஆம் 30 வயதை கடந்தவர் போன்ற தோற்றம் இல்லாமல் இளமையுடன் பயணித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் பெண்களை மையமாக வைத்து எடுக்கும் திரைப்படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடித்து வருகிறார்.
அண்மையில் இவர் நடித்துள்ள காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இதனிடையே அட்லீயின் உதவியாளர் இயக்க உள்ள புதிய திரைப்படத்திற்கு நடிகை நயன்தாரா கம்மிட் ஆகியுள்ளாராம். அவர் இந்த படத்தில் நடிப்பதற்கு இதுவரை இல்லாத அளவிற்கு தனது சம்பளத்தை உயர்த்தி, நடிப்பதற்கு ரூ.10 கோடி நிர்ணயித்துள்ளதாக கூறப்படுகிறது.
சினிமா மட்டுமின்றி பிசினஸ் பக்கமும் நடிகை நயன்தாரா தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.இந்நிலையில் ரசிகர்கள் நயன்தாராவின் திருமணம் எப்போது என்ற கேள்விகளுடன் காத்துக்கொண்டள்ளனர்.