ஆண்களே...என்னை மன்னிச்சிருங்க.. கல்லூரி விழாவில் நாசர் செய்த காரியம்

By Petchi Avudaiappan Apr 25, 2022 05:05 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

ஆண்கள் அனைவரும் தன்னை மன்னித்து விடுமாறு கல்லூரி விழாவில் பிரபல நடிகர் நாசர் பேசியுள்ளார்.

சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் நடிகர்கள் நாசர், ஜீவா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய நாசர், கொரோனாவால் கடந்த 2 வருடங்களாக வீட்டிற்குள்ளேயே இருந்தோம். இன்று இவ்வளவு பெரிய விழா குதூகலத்துடனும், உற்சாகத்துடனும் நடப்பதாக குறிப்பிட்டார். 

 பள்ளி படிப்பு முடிந்த எல்லோருக்கும் லயோலா கல்லூரியில் சேர வேண்டும் என்று தான் எண்ணம் தோன்றும். இன்று விஸ்காம் என்கிற பட்டபடிப்பு தமிழ் நாட்டில் மூளை முடுக்கிலும் உள்ளது என்றாலும் அது முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது லயோலா கல்லூரியில் தான் என நாசர் நினைவு கூர்ந்தார். மேலும் நடிகர் சங்கத்தின் பொதுக்குழு இங்கு தான் நடைபெற்றதாகவும், சினிமாத்துறைக்கு வர ஆசைப்பட்டால் அதற்குண்டான படிப்பை படித்து விட்டு வாருங்கள் என்றும் அவர் அறிவுரை வழங்கினார். 

நீங்கள் எல்லாத்தையும் விட்டு விட்டு சினிமாவிற்கு வந்தீர்களேயானால் நான் பரந்த கைகளுடனும் பெரிய இதயத்துடனும் வரவேற்கிறேன். என்னுடைய தேவை, பிரச்சனைகள் எதிர்கொள்வது என அனைத்தையும் என் மனைவி கமீலா நாசர் தான் பார்த்துக் கொள்கிறார். ஒரு பொறுப்பை ஒரு பெண்ணிடம் கொடுத்தால் ஆணை விட மிக சிறப்பாக செய்வார்கள் என்பதே நான் கண்கூடாக பார்த்துள்ளேன். 

இங்கு இவ்வளவு பெண் குழந்தைகளை பார்க்கும் போது நம் நாடு முன்னேறிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்த நாசர் ஆண்கள் அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள் என தெரிவித்தார். மேலும் நான் ஏன் பெண்களை பற்றி பேசுகிறேன் என நினைப்பீர்கள். நான் சென்ற வாரம் தான் சண்டிகர் மாநிலத்திலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தை ஓட்டியது ஒரு பெண். அதேபோல, வடபழனியை தாண்டும் வேளையில் ஆட்டோ ஓட்டும் ஒரு பெண்மணி “என்ன சார் நல்லாருக்கீங்களா?” என்று கேட்டார். இது பெண்களின் காலமாக மாறிவிட்டது. ஆண்கள் சிறிது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என நாசர் தெரிவித்தார்.