டேய்.. என்னடா ஆச்சு : மயில்சாமியின் உடலை பார்த்து கதறி அழுத எம்.எஸ்.பாஸ்கர்

MS Bhaskar Death Mayilsamy
By Irumporai Feb 19, 2023 05:52 AM GMT
Report

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி, இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பொதுமக்கள், திரைப்பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கதறி அழுத பாஸ்கர்

அந்த வகையில் நடிகர் எம்.எஸ் பாஸ்கர் மயில்சாமியின் இல்லத்திற்கு அஞ்சலி செலுத்த சென்ற போது அவரது உடலை பார்த்து டேய் போயிட்டியே டா எத்தனை முறை வாடா போடா ன் சொல்வ என கதறி அழுதார்.

பின்னர் பிரபல ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் எனக்கு பேச்சே வரவில்லை, இடிதாக்கியது போல ஒரு நிலையில் இருக்கிறேன். கடைக்கு போனால் கூட, மயில்சாமியின் வீட்டுக்கு போய் பேசிவிட்டுத்தான் வருவேன்.

டேய்.. என்னடா ஆச்சு : மயில்சாமியின் உடலை பார்த்து கதறி அழுத எம்.எஸ்.பாஸ்கர் | Actor Ms Bhaskar Death Of Comedian Mayilsamy

என்னை மாமான்னு ரொம்ப ஆசையாக கூப்புடுவான், அவருடைய மனைவி அண்ணா வாங்க என்று அழகாக அழைப்பார்கள். மயில்சாமி என்பவர் ஒரு சாதாரண மனிதன் இல்லை. யாரும் பசி என்று அவர் முன்னால் வாடி நின்றுவிட்டால் துடித்துவிடுவார், ஒருமுறை படப்பிடிப்பின் போது ஒரு பாட்டி வெள்ளரிக்காய் எடுத்துவந்தார். கூடையோடு வெள்ளரிக்காயை வாங்கி எல்லாருக்கும் கொடுங்க என்றார்

சிவ பக்தன்

படப்பிடிப்புக்கு வந்துவிட்டால்,நானும் மயில்சாமியும் ஒன்றாக சாப்பிடுவோம், ஒன்றாக தூங்குவோம், அப்படி சகோதரனாக, மைத்துனனாக, வள்ளலாக வாழ்ந்தவன் மயில்சாமி. மூன்று நாளுக்கு முன் தொலைபேசியில், சிவராத்திரிக்கு கோவிலுக்கு போக அழைத்தார்.

டேய்.. என்னடா ஆச்சு : மயில்சாமியின் உடலை பார்த்து கதறி அழுத எம்.எஸ்.பாஸ்கர் | Actor Ms Bhaskar Death Of Comedian Mayilsamy

நான் படப்பிடிப்பில் இருக்கிறேன் என்றேன். மிகப்பெரிய சிவபக்தர், சிவன் இவரை அழைத்துக் கொண்டார். மயில்சாமியின் ஆன்மா சிவன் நிழலில் இளைப்பாறட்டும் என எம்.எஸ். பாஸ்கர் கண்ணீருடன் இரங்கல் தெரிவித்துள்ளார்