பழம்பெரும் நடிகர் கலைமாமணி லியோ பிரபு காலமானார் - திரையுலகில் அடுத்த சோகம்!
பழம்பெரும் நடிகர் கலைமாமணி லியோ பிரபு உடல்நலக் குறைவால் காலமானார்.
லியோ பிரபு
தமிழ் சினிமாவில் திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர் என பன்முக திறமையாளர் லியோ பிரபு. நான் மகான் அல்ல, பருவ காலம், புதிர், பேர் சொல்லும் பிள்ளை, இது எங்க நாடு உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
கோயம்புத்தூரில் கடந்த 1993ம் ஆண்டு பிறந்த லியோ பிரபு, புகழ்பெற்ற பாய்ஸ் நாடக நிறுவனத்தில் நடிகராக தனது வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.
காலமானார்
பின்னர் தனது சொந்த நாடக குழுவான ஸ்டேஜ் இமேஜை நிறுவி பல நாடகங்களை அரங்கேற்றியுள்ளார். மேலும், பல தொலைக்காட்சி தொடர்களையும் தயாரித்துள்ளார்.
லியோ பிரபுவின் கலைச்சேவையை கௌரவிக்கும் விதமாக கடந்த 1990ம் ஆண்டு தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருது வழங்கியது.
இந்நிலையில் தனது குடும்பத்தினருடன் மதுரை அண்ணாநகரில் வசித்து வந்த லியோ பிரபு, நேற்று மாலை 6 மணிக்கு உடல்நலக் குறைவால் காலமானார்.

உச்ச கட்ட பதற்றம் : சற்று முன்னர் ஈரானின் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பு தலைமையகத்தை குண்டுவீசி தகர்த்தது இஸ்ரேல் IBC Tamil
